லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

விருதுநகர் அருகே ஷீரடி பாபா!

ஷீரடி சாய்பாபா பல்வேறு இடங்களில் கோயில் கொண்டு வழிபடப்படுகிறார்.

News image
Updated On :4 ஏப்ரல் 2013, 9:51 am

ஷீரடி சாய்பாபா பல்வேறு இடங்களில் கோயில் கொண்டு வழிபடப்படுகிறார். அவ்வகையில், விருதுநகர்-சிவகாசி சாலையில் மீசலூர் விலக்கருகே ஆலயத்தில் அருளும் பாபா, தன்னை வழிபடும் பக்தர்களின் பிரச்னைகளைத் தீர்த்து மகிழ்ச்சியான வாழ்க்கையை அளிக்கிறார்.

விருதுநகர் அருகே உள்ள மீசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராகவ நாயுடு. இவர் ஒருமுறை மகாராஷ்டிராவில் உள்ள ஷீரடி சாய்பாபாவை தரிசித்தார். அதன் பிறகு அவருடைய தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கி, நிம்மதி ஏற்பட்டது. தான் பெற்ற இன்பம் இவ்வையம் பெற வேண்டும் என்று விரும்பிய ராகவ நாயுடு சாய்பாபாவுக்கு திருக்கோயில் எழுப்ப முடிவு செய்தார். அவரது கிராமத்திற்கு அருகில் உள்ள மீசலூர்விலக்கருகே 5 ஏக்கர் நிலத்தில் "ஷீரடி சாய்பாபா மந்திர்' என்னும் திருக்கோயிலை எழுப்பினார். அதற்காக ஜெய்பூரிலிருந்து ஷீரடி சாய்பாபாவின் சிலை வடிவமைக்கப்பட்டு இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டது. கடந்த 2009ஆம் ஆண்டு கும்பாபிஷேகமும் நடைபெற்றது.
இக்கோயிலில் நாள்தோறும் நான்கு கால பூஜைகள் நடத்தப்படுகின்றன. குரு பூர்ணிமா பூஜை, விஜயதசமி ஆகியவை மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

ராம நவமி நாள் சாய்பாபா பிறந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் வருகிற ராமநவமி நாள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. அதில் கலந்துகொண்டு சாய்பாபாவை வழிபட அனைத்து நலன்களும் உண்டாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயிலை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக மண்டபம் அமைக்கும் திருப்பணி தற்போது நடந்துகொண்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.