பூமியோகம் கிட்டும்!

ஆரணி, சைதாப்பேட்டை பகுதியில் வி.ஏ.கே. நகர் செல்லும் வழியில் உள்ளது பூமிநாதர் திருக்கோயில்
பூமியோகம் கிட்டும்!
Updated on
1 min read

ஆரணி, சைதாப்பேட்டை பகுதியில் வி.ஏ.கே. நகர் செல்லும் வழியில் உள்ளது பூமிநாதர் திருக்கோயில். இப்பகுதியில் கடந்த 96ஆம் ஆண்டு

குமரேசன் உள்ளிட்ட சிலருக்கு சிவலிங்கமும் சில விக்ரஹங்களும் கிடைத்தன. எனவே அந்த இடத்தில் ஏற்கெனவே கோயில் இருந்ததை சான்றோர்கள் உறுதிப்படுத்தினர். இதையடுத்து விக்ரஹங்களுக்கு பூஜை செய்த அப் பகுதி மக்கள் சிறிய அளவில் ஒரு கோயிலையும் எழுப்பினர். லோகநாயகி சமேத பூமிநாதர் அருள்புரியும் இக்கோயிலுக்கு கடந்த 2006ஆம் ஆண்டு கும்பாபிஷேகம்

நடைபெற்றது. இதையடுத்து தற்போது ராஜகோபுரம், சுற்றுச் சுவர் போன்றவை எழுப்பப்பட்டு கடந்த 23ல் குடமுழுக்கு கண்டது. பூமி நாதரை வழிபட்டால் சொந்த வீடு, மனை அமையும் என்பது நம்பிக்கை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com