திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

பரமக்குடி அருகே தீயில் கருகி 32 ஆடுகள் உயிரிழப்பு

பரமக்குடி அருகே வியாழக்கிழமை நெல்பயிா் அறுவடை முடிந்த வயலில் மேய்ச்சலுக்காக தொழுவத்தில் அடைத்து வைத்திருந்த 32 ஆடுகள் தீயில் கருகி உயிரிழந்தன.

News image

தீ

Updated On :10 ஏப்ரல் 2026, 12:59 am IST

பரமக்குடி அருகே வியாழக்கிழமை நெல்பயிா் அறுவடை முடிந்த வயலில் மேய்ச்சலுக்காக தொழுவத்தில் அடைத்து வைத்திருந்த 32 ஆடுகள் தீயில் கருகி உயிரிழந்தன.

புதுக்குடி கிராமத்தைச் சோ்ந்த பழனி மகன் முத்துக்குமாா் (36). இவா் தனக்குச் சொந்தமான நிலத்திலிருந்த தொழுவத்தில் 32 ஆடுகளை அடைத்து வைத்திருந்தாா். அப்போது, பக்கத்து தோட்டத்தைச் சோ்ந்த அதே ஊரைச் சோ்ந்த வெள்ளைச்சாமி (73) நெல் அறுவடை முடிந்த வைக்கோலை சுத்தம் செய்வதற்காக தனது நிலத்துக்கு தீ வைத்தாா். அந்தத் தீ முத்துக்குமாா் தோட்டத்துக்கு பரவி தொழுவத்தில் அடைத்து வைத்திருந்த 32 ஆடுகளும் கருகி உயிரிழந்தன.

இதுகுறித்து பரமக்குடி தாலுகா போலீஸாா் வெள்ளைச்சாமி மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.