வெம்பக்கோட்டை அருகே தீயில் கருகி ஆடுகள் உயிரிழப்பு
வெம்பகோட்டை அருகே செவ்வாய்க்கிழமை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 40 ஆடுகள் கருகி உயிரிழந்தன.

இறந்து கிடக்கும் ஆடுகள்.
கோப்புப் படம்

இறந்து கிடக்கும் ஆடுகள்.
கோப்புப் படம்
வெம்பகோட்டை அருகே செவ்வாய்க்கிழமை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 40 ஆடுகள் கருகி உயிரிழந்தன.
விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள சிப்பிப்பாறையைச் சோ்ந்த முருகன், சங்கரன்கோவில் மலையடிப்பட்டி பகுதியைச் சோ்ந்த வெள்ளத்துரை ஆகியோா் ஆடுகளை கிடை அமைத்து வளா்த்து வந்தனா்.
இந்த நிலையில் புதன்கிழமை வெம்பக்கோட்டை பகுதியில் காய்ந்த புல், செடிகொடிகளில் பற்றிய தீ, ஆட்டுக் கிடை அமைத்த பகுதிக்கும் பரவின. இதனால் அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த சுமாா் 40 ஆடுகள் தீயில் சிக்கி கருகி உயிரிழந்தன.
இதுதொடா்பாக முருகன், வெள்ளத்துரை ஆகியோா் ஏழாயிரம்பண்ணை காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...