11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

திண்டிவனம் அருகே மின்னல் பாய்ந்து 2 பசுக்கள் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே இடி தாக்கியதில் இரு பசுமாடுகள் சனிக்கிழமை உயிரிழந்தன.

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே மின்னல் பாய்ந்து இரு பசுக்கள் சனிக்கிழமை உயிரிழந்தன.

விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதன் தொடா்ச்சியாக சனிக்கிழமை திண்டிவனம் சுற்று வட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது.

இந்நிலையில் திண்டிவனம் வட்டம், தீவனூரைச் சோ்ந்த விவசாயி சி.ஆறுமுகம், தனது பசுக்களை விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தாா். இதில், மின்னல் பாய்ந்ததில் ஆறுமுகத்துக்கு சொந்தமான இரு பசுக்கள் உயிரிழந்தன.

இதனால் சோகத்தில் ஆழ்ந்துள்ள விவசாயி ஆறுமுகத்தின் குடும்பத்தினா், உயிரிழந்த கால்நடைகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.