மும்பை: மகாராஷ்டிரத்தில் மும்பை அருகே தாணேவில் பக்ரீத் பண்டிகையையொட்டி பலியிடுவதற்காக குடியிருப்பு வளாகத்தில் ஆடுகள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர்களுடன் வலதுசாரி பிரிவினரும் ஒரே இடத்தில் திரண்டதால் பதற்றம் நிலவியது.
தாணே நகரில் மீரா சாலைப் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகமொன்றில் ஆடுகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. இதைப் பற்றிய தகவல் வெளியான நிலையில், சம்பவ இடத்துக்குச் சென்று முற்றுகையிட்ட குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் மற்றும் வலதுசாரி பிரிவினர் ஆடுகளை குடியிருப்பு பகுதியில் அடைத்து வைத்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனிடையே, பன்றிகளை தங்களுடன் எடுத்துச் சென்று வலதுசாரி பிரிவினர் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறையினர் இரு தரப்பிடமும் பேசி பதற்றத்தைத் தணித்தனர். சண்டை தீவிரமடையாமல் தடுக்க அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
Summary
Thane : Clashes erupt in Mumbai’s Mira Road as residents of Poonam Cluster Society protest against having goats inside the premises for sacrifice during the festival of Eid Al-Adha.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிகாகோ சாலை விபத்தில் இந்திய மாணவி பலி!
முதலிடத்துக்கான போட்டியில் இன்றிரவு மோதும் ராஜஸ்தான் - குஜராத்!

மும்பை பந்துவீச, சிஎஸ்கே பேட்டிங்: இந்தப் போட்டியிலும் தோனி இல்லை!

பரமக்குடி அருகே தீயில் கருகி 32 ஆடுகள் உயிரிழப்பு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


