பிரிந்த குடும்பம் ஒன்று சேரும் எண்கண் ஸ்ரீ ஆதிநாராயணப் பெருமாள்
பிருகு முனிவர். தவம் செய்ய அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார். வன்னி மரக் காடான சமீவனம் பகுதிக்கு வந்தவர், தாம் தவம் செய்யத் தகுதியான இடம் என அதனைத் தேர்ந்தெடுத்து, பெருமானைக் குறித்து தவம் புரியலானார்.










