ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

காலனை கடிந்த கால சம்ஹாரமூர்த்தி!

தருமபுர ஆதீனத்திற்குச் சொந்தமான ஸ்ரீஅமிர்தகடேஸ்வர சுவாமி தேவஸ்தானம் எட்டு வீரட்டத்தலங்களில் ஒன்றாகும்.

News image
Updated On :15 பிப்ரவரி 2019, 4:30 am

DIN

தருமபுர ஆதீனத்திற்குச் சொந்தமான ஸ்ரீஅமிர்தகடேஸ்வர சுவாமி தேவஸ்தானம் எட்டு வீரட்டத்தலங்களில் ஒன்றாகும். தேவாரப் பதிகம் பெற்ற காவிரித் தென் கரைத் தலங்களில் இத்தலம் 47 -ஆவது தலமாகும். இறைவன் மார்க்கண்டேயருக்காக யமனை உதைத்ததலம். மார்க்கண்டேயர் அமுதகடேசுவரை வழிபட்டு என்றும் 16 ஆண்டாக இருக்கும் சிரஞ்சீவித்தன்மையை பெற்றார்.
 இத்தலவரலாற்றினை குறிக்கும் விதமாக காலசங்காரக் கடவுள் இவ்வாலயத்தின் மகாமண்டபத்தின் வடபால், சிற்ப வேலைப்பாட்டுடன் கூடிய அழகிய சபையில், யமனை
 நிக்கிரகானுக்கிரம் செய்த அவதாரத்தில் (தோற்றநிலை) தெற்கு முகமாக எழுந்தருளியுள்ளார். வலகத்திருக்கரங்களில் சூலமும், மருவும் உள்ளன. இடத்திருவடியால் உதையுண்ட யமனார் தலைகீழாக வீழ்ந்து கிடக்கின்றார். வீழ்ந்து கிடக்கும் யமனை ஒரு சிவபூதம் கயிறுகட்டி இழுத்து அப்பறப்படுத்தும் காட்சி காணற்கரியது.
 இறைவனார் வலப்பக்கத்தில் ஸ்ரீ மார்க்கண்டேயர் அருளுருவாய்க் காட்சியளிக்கிறார். இடப்பக்கத்தில் பாலாம்பிகை திருமகள், கலைமகளாகிய சேடியருடன் விளங்குகின்றார். இம்மூர்த்திக்கு எதிரில் வடக்கு முகமாக, யமனார் (உற்சவமூர்த்தி) எருமையுடன், ஆண்டவன் அருளை நாடிய வண்ணமாக ஆட்சித் திருக்கோலத்தில் காணப்படுகின்றார்.
 காலசங்காரக் கடவுளாகிய காலசம்ஹாரமூர்த்திக்கு ஆண்டில் பன்னிரெண்டு முறை அபிஷேகம் நடைபெறுகின்றது. சித்திரைப் பெருவிழாவில் ஆறாம் திருநாள் மட்டும் தான் வீதியுலா வருவார். மாசி மாதம் கும்ப சதுர்த்தசி திதியில் இரவு இரண்டாம் காலம் இம்மூர்த்திக்கு நடைபெறும் அபிஷேகம் மிகவும் சிறப்பாக கருதப்படுகின்றது.
 இவ்வாண்டு, இவ்வைபவம் பிப்ரவரி 18 -ஆம் தேதியன்று நடைபெறுகின்றது. மூலஸ்தானத்திலேயே இம்மூர்த்திக்கு நடைபெறும் இந்த அபிஷேகத்தை கண்ணாறக்கண்டு இறைவனையும், இறைவியையும் வழிபட்டு எம பயம் நீங்கி, நீண்ட ஆயுளுடன் ஆரோக்யமாக வாழும் பேற்றினைப் பெறுவோம்.
 தொடர்புக்கு: 04364 - 287429.
 - எஸ். கோவிந்தராஜன்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.