நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஜடா​மு​டியே ராஜ மகு​டம்!

மூர்த்தி நாய​னார், 63 நாயன்​மார்​க​ளில் 15-ஆம் நிலை​யில் உள்​ள​வர் என்று சேக்​கி​ழார் புரா​ணம் கூறு​கி​றது. வைசிய குலத்​தில் அவ​த​ரித்த இவர் பல​ச​ரக்கு வியா​பா​ரம் செய்து வந்​தார்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2020, 12:30 am

எஸ். எஸ். சீதாராமன்

மூர்த்தி நாய​னார், 63 நாயன்​மார்​க​ளில் 15-ஆம் நிலை​யில் உள்​ள​வர் என்று சேக்​கி​ழார் புரா​ணம் கூறு​கி​றது. வைசிய குலத்​தில் அவ​த​ரித்த இவர் பல​ச​ரக்கு வியா​பா​ரம் செய்து வந்​தார். மூர்த்தி நாய​னார், பாண்​டிய மன்​ன​னைப்​போல் சொக்​க​நா​த​ரி​டம் அதீத பக்தி கொண்​ட​வர். தின​மும் சுந்​த​ரேஸ்​வ​ரரை சென்று தரி​சித்​தால் மட்டுமே அன்​றைய தினம் புனி​தம் அடைந்​த​தாக நினைப்​பார். 

சிவ​னார் எப்​போ​தும் சந்​தன மணத்​து​டன் இருக்​க​வேண்​டு​மென ஒரு பெரிய சந்​த​னக் கட்டையை எடுத்​துச் சென்று அக்​கோ​யி​லி​லேயே சந்​த​னம் அரைக்​கும் கல்​லில் கட்டையை நன்​றா​கத் தேய்த்து, மையாக வரும் சந்​த​னத்தை இறை​ய​னா​ருக்கு தின​சரி தந்து பர​வ​ச​ம​டை​வார். 

அந்​தக் காலத்​தில் கர்​நா​ட​கத்தை ஆண்ட வடுக மன்​ன​னின் திடீர் படை​யெ​டுப்​பால் மது​ரையை ஆண்ட பாண்​டிய மன்​னன் கொல்​லப்​பட்டு, மதுரை வடுக மன்​ன​னின் வச​மா​னது. அம்​மன்​னன் சமண மதத்​தைப் பின்​பற்​று​ப​வ​ரா​த​லால், அனை​வ​ரும்  சம​ண​ராக மாற வேண்​டும். மறுத்​தால் சிரச்​சே​தம்; கொடு​மை​கள் தலை​வி​ரித்​தா​டின.

மூர்த்தி நாய​னா​ரின் சிவத் தொண்​டினை கேள்​வி​யுற்ற வடுக மன்​னன், "இவர் சந்​த​னக்​கட்டை வாங்​கும் இடங்​க​ளில் யாரும் அவ​ருக்கு சந்​த​னக் கட்டை கொடுக்​கக் கூடாது' என ஆணை​யிட்​டான்.

மூர்த்தி நாய​னார் "சொக்கா உனக்கு இன்று சந்​த​னம் கொடுக்க இய​ல​வில்​லையே' என மனம் நொந்​தார். பின்​னர், மன​தைத் தேற்​றிக்​கொண்டு, எப்​போ​தும்​போல் சந்​தன மேடைக்​குச் சென்​றார். ஈசனை மன​தில் நிறுத்தி, சந்​த​னக் கட்டைக்​குப் பதில் தன் இரு கைக​ளை​யும் சந்​த​னக் கட்டை​யாக நினைத்து அந்த கருங்​கல் மேடை​யில் தேய்க்க ஆரம்​பித்​தார். 

கை தேய்ந்​தது, ஒரே ரத்​த​மும் சதை​யும் பீறிட்டு வெளி​வந்​தது கூடத் தெரி​யா​மல் திரு​ஐந்​தெ​ழுத்து மந்​தி​ரத்​தைக் கூறிக்​கொண்​டி​ருந்​தார். 

இத​னைக் காணச் சகி​யாத முக்​கண்​ணன் சுந்​த​ரேஸ்​வ​ரன் -  "நில்​லடா மூர்த்தி... உன் பக்தி என்​னைப் பதைக்​கச் செய்​கி​றது. உன் பிரேம பக்​தியை மெச்சி, உன்னை இந்​தப் பாண்​டிய நாட்டின் மன்​ன​னாக ஆக்​கு​கி​றேன்' என அச​ரீரி வாக்கு அரு​ளி​னார்.

அன்​றி​ரவு, வடுக மன்​ன​னுக்​குத் தீராத நோய் வந்து உடனே இறந்​து​விட்​டான். மறு​நாள் அவ​னது ஈமக்​கி​ரி​யை​கள் முடிந்​த​பின், வாரிசு இல்​லாத அம்​மன்​ன​னுக்கு பதில் என்ன செய்​ய​லா​மென மந்​தி​ரி​மார்​கள் ஒன்​று​கூடி விவா​தித்​த​னர். அர​சக் கொள்​கை​யின்​படி பட்டத்து யானை​யின் கண்​க​ளைக் கட்டி அதன் தும்​பிக்​கை​யில் மலர்​மா​லை​யைக் கொடுத்து அனுப்​பி​னர். 

அம்​மாலை யார் கழுத்​தில் விழு​கி​றதோ அவ​ரையே இந்த பாண்​டிய நாட்டின் மன்​ன​ராக ஏற்​போ​மென விவா​தித்து, அப்​ப​டியே செய்​த​னர். 

சுந்​த​ரேஸ்​வ​ரர் கோயில் வாயி​லில் நின்​றி​ருந்த மூர்த்தி நாய​னா​ரின் கழுத்​தில் அந்த மாலை விழுந்​தது. அதனை ஏற்ற நாய​னார், "நான் ராஜ மகு​டம் தரி​யேன்; என் ஜடா​மு​டியே ராஜ மகு​ட​மாய் இருக்​கும்; காவித்​துணி அணிந்து என்னை சிவ பக்​த​னாய் தொட​ரச் செய்​தால் ஆட்சிப் பொறுப்​பினை ஏற்​கி​றேன்' என்​றார். 

அனை​வ​ரும் ஏற்​றுக் கொண்​ட​தால் அரச பத​வியை ஏற்று நல்​லாட்சி செய்து, பின் இறை​ய​னா​ரின் திருக்​கை​லாய பத​வி​ய​டைந்​தார். மூர்த்தி நாய​னா​ரின் திரு​நட்​சத்​தி​ரம் (ஆகஸ்ட் 12) ஆடிக்​கி​ருத்​தி​கை​யா​கும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.