நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

செய்ய வேண்டியதையும் தெரிந்துகொள்ள வேண்டும், செய்யக் கூடாததையும் தெரிந்துகொள்ள வேண்டும், செயல் புரியாமல் இருப்பது பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும்.

News image

சுவாமி கமலாத்மானந்தர்

Updated On :1 அக்டோபர் 2021, 10:32 am

DIN

இந்த உடம்பு சாம்பலாகிவிடும். உடம்பிலிருந்து வெளியேறுகின்ற பிராணன் எங்கும் நிறைந்த அழிவற்ற பிராணனுடன் கலந்துவிடும். ஓம்! மனமே! செய்தவற்றை நினைத்துப் பார். மனமே செய்தவற்றை நினைத்துப் பார்.
-ஈசாவாஸ்ய  உபநிஷதம் - 17

செய்ய வேண்டியதையும் தெரிந்துகொள்ள வேண்டும், செய்யக் கூடாததையும் தெரிந்துகொள்ள வேண்டும், செயல் புரியாமல் இருப்பது பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். செயல்களின் போக்கு ஆழமானது.
-பகவத்கீதை 4.17

மனிதனிடம் தீமையின் ஓர் அம்சமும் இருக்கிறது. அதுவே கீழ்த்தரமான ஆசைக்கு இலக்கான ஆன்மா. அதுவே வெறிக் குணத்திற்கும், காமத்திற்கும் இருப்பிடமாக இருக்கிறது. அதுவே நாம் இறைவனுடன் தொடர்பு கொள்வதற்கு பெரிய முட்டுக்கட்டையாக இருக்கிறது.  
-தர்ம சித்தாந்தம்

நூறுகோடி சாஸ்திரங்களாலும் வெகுவாய்ப் பேசுவதாலும் இங்கு ஆக வேண்டியதென்ன? சிறந்த குரு கிருபையாலன்றி சித்தத்தில் சாந்தி அடைதற்கரிது. 
-குரு கீதை - 2.20

அருணோதயத்தால் இருள் முதலில் நீக்கப்பட்டு, பிறகு சூரியன் தானே பிரகாசிக்கிறது. அதுபோலவே, ஞானத்தால் அக்ஞானம் நீக்கப்பட்ட ஆன்மா பிரகாசிக்கும்.
-ஸ்ரீ ஆதிசங்கரர்

எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தால் என்ன? வழிப்போக்கனுக்கும் நிழல் தராமல், எளிதில் பறித்து உண்ணவும் வகையில்லாமல், உயரத்தில் பழத்தைக் குலை குலையாகச் சுமந்து நிற்கும் பேரீச்சை மரம்போல் இருந்து என்ன பயன்?

கொடுக்கும் குணமுடையவனே உயர்ந்தவன்; பிறருடைய துன்பங்களை உணர்ந்து, தானே உதவி செய்ய முன்வருகிறானே  அவன்தான் உயர்ந்தவன்; மற்றவர்களது துயரத்தை உணர முடியாதவன்தான் நாஸ்திகன்.
-மகான் கபீர்தாசர்

இப்போது இறைவன் அருளால் எனக்கு செல்வம் கிடைத்திருக்கிறது. இதை நான் மட்டும் அனுபவித்தாலோ, சேர்த்து வைத்தாலோ, அந்தச் செல்வம் சவத்திற்கும் சமம். ஆனால் அதைப் பிறரோடு பங்கிட்டுக்கொண்டால், அது இறைவன் பிரசாதம் ஆகிவிடும்.
-குருநானக்

அகந்தை உதிக்கும்போது எல்லாமும் தோன்றும். அகந்தை இல்லாதபோது எல்லாமும் இல்லாமல் போகும். இதனால் அகந்தையே எல்லாமும் ஆகும். ஆகையால் இந்த "அகந்தையின் உண்மை என்ன?' என்று விசாரிப்பதே எல்லாவற்றையும் விடுவதாகும்.
-ஸ்ரீ ரமண மகரிஷி 

நன்றாகக் கனிந்த பழத்தில் சாறு நிறைந்திருக்கிறது. அதுபோல் இறைவன் எல்லாப் பொருள்களிலும் இரண்டறக் கலந்திருக்கிறான். அத்தகைய ஈசனை மனம் ஒன்றி வணங்கினால் நம் உணர்வுகளும் ஒடுங்கி ஈசனின் நிலையை  அடையலாம்.
-அவ்வையார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.