தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

மாண்புடைய நோன்பு  பெருநாள்!

ரமலான்  மாதம் முப்பது  நாள்கள்  தப்பாது  நோன்பு  நோற்று  ஒப்பிலா  இறைவனின்  ஒப்பற்ற  அருளை  நேரடியாக  பெறும்  நிறைந்த

Published On :

ரமலான்  மாதம் முப்பது  நாள்கள்  தப்பாது  நோன்பு  நோற்று  ஒப்பிலா  இறைவனின்  ஒப்பற்ற  அருளை  நேரடியாக  பெறும்  நிறைந்த  மனத்தோடு  நிறைந்து  நின்று  பிறந்த  குழந்தைகள்  போல பாவம்  அற்றவர்களாய்  பெரும் மகிழ்ச்சி  அடையும்  கிடைத்தற்கரிய கிருபை  பொழியும்  பெருநாளே  ஈதுல்பித்ர் என்னும்  மாண்புடைய  நோன்பு  பெருநாள்.  நடப்பாண்டில்  இந்த திருநாள்  3.5. 2022 -இல்  வருகிறது.
  பசியறியாது  புசித்து  வாழ்வோர்  பசியோடு  நோற்ற  நோன்பில்  அறியாது  நிகழ்ந்த  குறைகளைக் களைந்து  நிறைவான  இறையருளைப்  பெற பெருநாள்  பிறை கண்டதிலிருந்து  தொழுகைக்குப் புறப்படு முன்  பித்ர் தர்மத்தை  வழங்க  வேண்டும்.
  பித்ர்  என்பது யார் எந்த நாட்டில்  எந்தப் பகுதியில்  வாழ்கிறார்களோ  அந்த நாட்டில்  அந்தப் பகுதியில்  பிரதானமாக  உண்ணும்  உணவு  தானியத்தை  எடுத்துகாட்டாக  நம்  தமிழ்நாட்டில்  அரிசியைக் கொடுக்கும்  தர்மம்.
  ஒரு குடும்பத்  தலைவர் அவரின்  பொறுப்பில்  உள்ள  அன்று  பிறந்த  குழந்தை  முதல் பெரியவர்  வரை அத்தனை  குடும்ப உறுப்பினர்களுக்கும்  ஒருவருக்கு இரண்டு  கிலோ  வீதம் கணக்கிட்டு  ஏழைகளுக்குக் கொடுக்க  வேண்டும்.
  ஜகாத்  என்னும்  ஏழை  வரி கட்டாய  கடமை ஆக்கப்படுவதற்கு முன்னரே  பித்ரா  தர்மம்  கடைபிடிக்கப்பட்டு  இன்று வரை  நடைமுறையில்  உள்ளது.
  பித்ரா  தர்மம் பற்றிய  தகவலைக் கைஸிப்னு  ஸஃது ப்னு  உபாதா ( ரலி)  அறிவிக்கிறார்.  நூல் - நஸஈ
 இந்த  பித்ரா தர்மம்  இருப்போர்  இல்லாதோருக்குக் கொடுத்து உதவி  எல்லோரும்  சமமாய்  மகிழ்வாய்  ஒன்றாய்  நின்று பெருநாள்  தொழுகையை  நிறைவேற்றி  சகோதரத்துவத்தையும்  சமத்துவத்தையும்  நிலைநிறுத்த  வேண்டுகிறது.  தூண்டுகிறது.  இதை இந் நந்நாளில்  கடைபிடிப்பதோடு  நிறுத்திவிடாது எந்நாளும்  பேண வேண்டும். இருப்போர்  இல்லாதோருக்கு  உதவி  அவர்களும்  தொழில்  வணிகம்  அலுவல்கள்  புரிந்து  எல்லாரும்  ஏற்றமாய்  வாழ உறுதி  ஏற்போம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.