தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மாரியம்மன் மகிமை!

அங்காளம்மனுக்கு திறந்தவெளியே அவள் விமானம்.

News image
Updated On :28 பிப்ரவரி 2025, 12:18 pm

பொள்ளாச்சி நகரின் காவல் தேவதையாக மாரியம்மன் கோயில் உள்ளது. அனைத்து உயிரினங்களையும் கருணை நிறைந்து அல்லும், பகலும் காத்து நின்று அருளாட்சி புரிந்து வரும் உலகநாயகியாக "அன்னை மாரியம்மன்' போற்றப்படுகிறாள்.

முன்பு ஓடுகள் வேய்ந்த ஒரு சிறு கோயிலாக இருந்தது. தற்போது லட்சக்கணக்கான பக்தர்களைத் தன்பால் ஈர்த்துள்ளது.

உயர்ந்த பீடத்தில் வடக்கு நோக்கி அமர்ந்து அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கொடிமரத்தை வணங்கி உள்ளே நுழையும்போது, இடது புறம் விநாயகரையும், வலது புறம் முருகனையும், பெண் காவல் தெய்வங்களையும் காணலாம். கருவறையைச் சுற்றி வலம் வரும்போது உள்ள மண்டபத்தில் அழகிய செப்புப் படிமங்கள் உள்ளன.

கிழக்கு நுழைவாயிலின் வழியாகச் சென்றால், விசாலமான மண்டபத்தை அடையலாம். தொடர்ச்சியாக அங்காள பரமேஸ்வரி அம்மன் அருள்பாலிக்கிறார். இவ்விரு அன்னைகளின் அற்புத இருப்பிடமானதால்தான் இக்கோயிலுக்கு "அருள்மிகு மாரியம்மன் அங்காளம்மன் கோயில்' எனப் பெயர் பெற்றது.

அங்காளம்மனுக்கு திறந்தவெளியே அவள் விமானம். திருப்பணியின்போது விமானம் எழுப்ப உத்தரவு கேட்டபோது, அன்னையின் அனுமதி கிடைக்கவில்லையாம். அதாவது அன்னையின் விண்முட்டி நிற்கும் அருளாட்சியை கட்டுக்குள் கொண்டுவருவதை அவள் விரும்பவில்லை என்பது தெளிவாகிறது.

சிறப்புமிக்க இந்தக் கோயிலின் மாசிப் பெருந்திருவிழா தற்போது நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வுகள்: பிப். 28} வெளிப் பூவோடு ஆரம்பம், மார்ச் 1} கொடி கட்டுதல், 2}பூவோடு, 3}ஆயக்கால் போடுதல், 4}மகுடம் வைத்தல், 5}மாவிளக்கு, திருக்கல்யாண உற்சவம், தேரோட்டம், 6}இரண்டாம் நாள் தேரோட்டம், 7}தேரோட்டம், பாரி வேட்டை, தெப்பத் தேர், 8}அம்மன் மஞ்சள் நீராடுதல், கம்பம் எடுத்தல், 10 - மகா அபிஷேகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.