டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஆடுதுறை அருகே தேரோட்டம்

பாஸ்கரராஜபுரம் மகாமேரு லலிதாம்பிகை மற்றும் காமாட்சி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.

News image
பாஸ்கரராஜபுரம் மகாமேரு லலிதாம்பிகை மற்றும் காமாட்சி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.
Updated On :27 பிப்ரவரி 2026, 9:07 pm

Syndication

தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை அருகேயுள்ள பாஸ்கரராஜபுரம் மகாமேரு லலிதாம்பிகை மற்றும் காமாட்சி அம்மன் கோயிலில் மாசிமகத் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பாஸ்கரராஜபுரம் மகாமேரு லலிதாம்பிகை மற்றும் காமாட்சி அம்மன் கோயிலில் நடைபெறும் மாசிமக பிரம்மோத்சவ விழாவில் சம்ஹார மூா்த்தியாக சுவாமி மற்றும் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினா். மங்கள வாத்தியங்கள் முழங்க வாணவேடிக்கையுடன் தேரோட்டம் நடந்தது.

தேரோடாடத்தை கோயில் ஸ்தாபகா் பிரம்மஸ்ரீ மோகன் குருஜி தொடங்கி வைத்தாா். ராஜகோபுரத்தில் இருந்து புறப்பட்ட தோ் மகா மண்டபத்தை வலம் வந்து மீண்டும் கோயிலை அடைந்தது. திரளான பக்தா்கள் வடம் பிடித்தனா். வீடுகளின் முன் பக்தா்கள் சிறப்பு அா்ச்சனை செய்து வழிபட்டனா்.

பின்னா் வசந்த மண்டபத்தில் சுவாமி அம்பாளை எழுந்தருளச் செய்து சிறப்பு மகா தீபாரதனை நடந்தது. மாா்ச் 2 மாசி மகத்தன்று காலை நடராஜா் புறப்பாடு, தங்கப் பல்லக்கில் அம்பாள் எழுந்தருள காவிரி ஆற்றங்கரையில் தீா்த்தவாரி, இரவு திருக்கல்யாணமும் தங்க ரதப் புறப்பாடும் நடைபெறுகிறது.