சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

குறை தீர்க்கும் பொன்னியம்மன்

நூறு ஆண்டுகளுக்கு முன்பு பனப்பாக்கம் கிராம எல்லையில், ஏரிக்கரையோரமாக மண்ணில் புதைந்திருந்தது சுவாமி சிலை.

News image
பொன்னியம்மன்
Updated On :20 ஜூன் 2025, 6:17 am

DIN

நூறு ஆண்டுகளுக்கு முன்பு பனப்பாக்கம் கிராம எல்லையில், ஏரிக்கரையோரமாக மண்ணில் புதைந்திருந்தது சுவாமி சிலை. அந்த வழியாக நடந்து சென்ற சரோஜா என்ற இளம்பெண் தற்செயலாகப் பார்த்தார். உடனே அவர் அருகில் சென்றபோது, சேறு படிந்தவாறு கருங்கல்லில் வடிவமைக்கப்பட்ட அம்மன் சிலை என்பதை அறிந்து மெய்சிலிர்த்துப் போனார். சிலையை வெளியே எடுத்த சரோஜா, மண் சேற்றைத் துடைத்து சுத்தம் செய்தார். பின்னர், அம்மன் சிலையை அதே இடத்தில் பத்திரமாக வைத்து விட்டு, வீடு வந்து சேர்ந்தார் சரோஜா.

இரவு முழுவதும் அம்மன் நினைவே சரோஜாவுக்கு இருந்து, தூக்கம் வராமல் தவித்தார். மறுநாள் சரோஜா குடத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு போய் அம்மன் சிலையை சுத்தம் செய்து, பூவை வைத்து வணங்கி விட்டு திரும்பினார். பின்னர், அவர் அவ்வப்போது வழிபட்டு வந்தார்.

ஒரு நாள் ஏரிக்கரை மீது சரக்கு லாரி மணலில் புதைந்து போய் நின்றது. ஓட்டுநர் எவ்வளவோ முயன்றும் சக்கரம் மணலில் சிக்கிச் சுழன்றதே தவிர, லாரியை கிளப்பி எடுத்துச் செல்ல முடியவில்லை. ஓட்டுநரும் களைத்துப் போய் நின்றிருந்தார். அப்போது அம்மன் சிலைக்கு வழிபாடு நடத்த குடத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்த சரோஜாவிடம் ஓட்டுநர், குடிக்கத் தண்ணீர் கேட்டார். "ஆள் நடமாட்டம் இல்லையே .. எப்படி லாரியை எடுக்கப் போகிறாரோ இந்த மனுஷன்' என்று மனதில் நினைத்துக்கொண்ட சரோஜா, ""தண்ணீர் போதுமா?'' என்று கேட்டார். தண்ணீர் குடித்த ஓட்டுநரும் சரோஜாவிடம், ""குடத்தில் தண்ணீரை எங்கேம்மா எடுத்துட்டு போறே?'' என்று கேட்டார். அம்மன் சிலையைக் காட்டிய சரோஜா , ""அம்மனை வழிபடப் போகிறேன்'' என்றார். உடனே ஓட்டுநரும் வந்து வழிபட்டுள்ளார்.

மறுநாள் காலையில் சரோஜா தாம்பரம் செல்ல ஏரிக்கரையில் நடந்து செல்லும் மண்ணில் புதைந்து நின்ற லாரியை காணவில்லை. ஆனால், அம்மன் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, ஓட்டுநர் சிலரோடு நின்றுகொண்டிருந்தார். அப்போது சரோஜாவிடம் ஓட்டுநர், ""நீங்க அம்மனை கும்பிட்டு விட்டு போன சிறிது நேரத்தில் மாட்டுவண்டி நிறைய ஏழெட்டு ஆளுங்க இந்த வழியாக வந்தார்கள்.

ஒரகடத்தைத் தாண்டி ஏதோ ஊர் பெயரைச் சொன்னார்கள். கடப்பாரை, மண்வெட்டியெல்லாம் கொண்டு வந்த அவர்கள், உதவி செய்தார்கள். அவர்கள் செல்லும்போது, செலவுக்கு பணம் கொடுத்தேன்.வேண்டாம்னு கிளம்பி போய்ட்டாங்க? அம்மனே என் கஷ்டத்தைப் பார்த்து மனம் இறங்கி லாரியை வெளியே எடுக்க ஆள்களை அனுப்பி இருக்கான்னு லாரி உரிமையாளரிடம் சொன்னதும் அவரும் என்னோட இங்கே சாமி கும்பிட வந்துட்டாரு?'' என்றார். உடனே லாரி உரிமையாளரும் சரோஜாவிடம், ""நீங்க சொன்னால் அம்மனுக்கு கோயில் கட்டுகிறேன்'' என்றார்.

இதன்பின்னர், ஏரிக்கரைக்கு கிழக்கில் சாலையோரமாக பொன்னியம்மனுக்கு கோயில் எழுப்பப்பட்டது .

"பிரச்னைகள், சோதனைகளையெல்லாம் தீர்த்து வைப்பாள்' என தன்னை நம்பிக்கையுடன் நாடி வந்து வணங்கும் பக்தர்களுக்கு அருள்பாலித்து, கிராமத் தெய்வமாக இருக்கிறார் பனப்பாக்கம் பொன்னியம்மன்.

வெள்ளிக்கிழமைகள், செவ்வாய்க்கிழமைகளில் விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஆடி மாதத்தில் கோயில் விழாக்கோலம்தான். காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உள்பட்ட படப்பை அருகே பனப்பாக்கத்தில் இந்தக் கோயில் உள்ளது.

தாம்பரம் மனோபாரதி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.