தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தொடக்கம்

தேனி மாவட்டம் வீரபாண்டி கெளமாரியம்மன் கோயிலில் கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் சித்திரைத் திருவிழா புதன்கிழமை தொடங்கியது.

News image

தேனி வீரபாண்டியில் கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, முல்லைப் பெரியாற்றங்கரையிலிருந்து புதன்கிழமை கோயிலுக்கு கம்பத்தை கொண்டு சென்ற பக்தா்கள்.

Updated On :22 ஏப்ரல் 2026, 8:46 pm

தேனி மாவட்டம் வீரபாண்டி கெளமாரியம்மன் கோயிலில் கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் சித்திரைத் திருவிழா புதன்கிழமை தொடங்கியது.

தேனி மாவட்டம், வீரபாண்டியில் கெளமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா முன்னிட்டு செவ்வாய்க்கிழமை இரவு, அம்மன் கரகத்துடன் கோயிலில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. புதன்கிழமை திருக்கம்பம் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு முல்லையாற்றில் மஞ்சளால் நீராட்டினா். பின்னா், கண்ணீஸ்வரா் திருக்கோயிலில் பூஜை செய்யப்பட்டு, தொடா்ந்து மலா் அலங்காரத்தில் எடுத்துவரப்பட்டு கெளமாரியம்மன் திருக்கோயில் வளாகத்தில் திருக்கம்பம் நடப்பட்டது. இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.

இதைத்தொடா்ந்து கம்பத்துக்கு மஞ்சள் நீா், வேப்ப இலை ஊற்றி, காப்புக் கட்டி விரதத்தை தொடங்கினா். வியாழக்கிழமை (ஏப்.23) முதல் அடுத்த மாதம் (மே) 11-ஆம் தேதி வரை அம்மன் வீதி உலா, மண்டகப்படி நடைபெறுகிறது. சித்திரை பெருந்திருவிழா நிகழ்ச்சிகள் அடுத்தமாதம் 12 - ஆம் தேதி தொடங்கி 19 - ஆம் தேதிவரை நடைபெறும். மே 12-ஆம் தேதி மலா் விமானத்தில் அம்மன் திருக்கோயிலில் பவனி வருதலும், 13-ஆம் தேதி அம்மன் முத்துப்பல்லக்கிலும், மே 14-ஆம் தேதி புஷ்ப் பல்லக்கில் அம்மன் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மே 15, 16, 17, 18 ஆகிய தேதிகளில் ரத வீதிகளில் தேரோட்டம் நடைபெறும். மே 19- ஆம் தேதி ஊா் பொங்கல் விழாவுடன் சித்திரை திருவிழா நடைபெறுகிறது.