/
தேனி மாவட்டம், பெரியகுளம் கெளமாரியம்மன் கோயில் ஆனிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு, முகூா்த்தக்கால் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, அம்மனுக்கு தினமும் காலை, மாலையில் சிறப்பு வழிபாடுகளும், பல்வேறு வாகனங்களில் வீதியுலாவும் நடைபெறும். வருகிற 30- ஆம் தேதி சாட்டுதலும், கம்பம் நடுதலும், ஜூலை 6-ஆம் தேதி கொடியேற்றமும், ஜூலை 14-ஆம் தேதி மாவிளக்கு, ரத உற்சவமும், ஜூலை 15-ஆம் தேதி அக்னிச்சட்டி எடுத்தலும், ஜூலை 21-ஆம் தேதி மறுபூஜையும், பாலாபிஷேகமும் நடைபெறும்.










