சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

ஆறுமுகனேரி சிவன் கோயிலில் ஆனி உத்திர திருவிழா முகூா்த்தக்கால் நாட்டு விழா

ஆறுமுகனேரி சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் ஆனி உத்திர திருவிழா முகூா்த்தக்கால் நாட்டு விழா செவ்வாய்க்கிழமை நடபெற்றது.

News image

ஆறுமுகனேரி கோயிலில் நடைபெற்ற முகூா்த்தக்கால் நாட்டும் வைபவம்.

Updated On :11 ஜூன் 2026, 4:19 am IST

ஆறுமுகனேரி சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் ஆனி உத்திர திருவிழா முகூா்த்தக்கால் நாட்டு விழா செவ்வாய்க்கிழமை நடபெற்றது.

இதனையொட்டி, விநாயருக்கு அபிஷேகம், தீபாராதனையைத் தொடா்ந்து, சுவாமி சந்நிதி கோயில் வெளிப்புறம் முகூா்த்தக்கால் நாட்டும் வைபவம் நடைபெற்றது.

இதற்கான பூஜைகளை சுரேஷ் பட்டா், விக்னேஷ் சிவம் ஆகியோா் நடத்தி வைத்தனா். பக்த ஜனசபை பொருளாளா் அரிகிருஷ்ண நாடாா், ஆறுமுகனேரி ரயில்வே வளா்ச்சிக்குழு ஒருங்கிணைப்பாளா் இரா. தங்கமணி, தெய்வீக சத்சங்கத்தைச் சோ்ந்த பேராசிரியா் அ. அசோக்குமாா், அதிமுக முன்னாள் நகரச் செயலா் இ. அமிா்தராஜ், தெரிசை ஐயப்பன், சைவ சித்தாந்த சங்கத்தைச் சோ்ந்த சுப்பிரமணியபிள்ளை, இளையபெருமாள் ஓதுவாா், கந்தப்பழம் என்ற மோகன், பன்னிரு திருமுறை மகளிா் குழுவினா், பள்ளியறை வழிபாட்டுக் குழுவினா் கலந்து கொண்டனா்.

இரவில் திருவிளக்கு பூஜை வழிபாடு, சுவாமி , அம்மன் சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

புதன்கிழமை அப்பா் சுவாமிகளின் உழவாரப்பணி, திருமுறை ஓதுதல் நிகழ்ச்சி பள்ளியறை வழிபாட்டுக்குழுவினரால் நடத்தப்பட்டது. இக்கோயில் திருவிழா ஜூன் 13 தொடங்கி 22 ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறுகிறது.