இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது.
பொன்சேகா தலைமையிலான ஜனநாயக கட்சிக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என நீண்ட நாள்களாக தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் அக்கட்சி பதிவு செய்யப்பட்டு, தீப்பந்தம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என இலங்கை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பொன்சேகா கூறியதாவது: எங்கள் கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பது புதிய பாதைக்கான தொடக்கம் என்றார்.
ஜனநாயக கட்சியை பதிவு செய்வதில் நீண்ட இழுபறி நீடித்து வந்தது. முன்னதாக பொன்சேகா கட்சியை பதிவு செய்ய அளிக்கப்பட்ட விண்ணப்பத்தை முன்னாள் தேர்தல் ஆணையர் தயானந்த திசநாயகே நிராகரித்து விட்டார்.
இந்நிலையில் மனித உரிமைகள் ஆணையத்தில் பொன்சேகா புகார் செய்திருந்தார். பின்னர் தற்போதைய தேர்தல் ஆணையர் மஹிந்த தேசப்பிரியாவிடம் மனு அளித்தார். அது ஏற்கப்பட்டு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக தேசிய கூட்டணி என்ற பெயரில் பொன்சேகா அதிபர் ராஜபட்சேவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பின்னர் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறையில் கழித்த நிலையில் கடந்த 2012 மே மாதம் விடுதலை செய்யப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கலவையான விமர்சனங்களையே பெற்ற எல்ஐகே!
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |

ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!

இந்த சீசனின் சிறந்த பந்துவீச்சு..! ஜேமி ஓவர்டனுக்கு ஆட்ட நாயகன் விருது தராதது ஏன்?
வீடியோக்கள்
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

