அமெரிக்காவைச் சேர்ந்த 15 சிறுவன் யெலி ரிமெர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முயற்சியில் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளார்.
அறிவுத் திறன், உடல் திறனில் பாதிப்பை ஏற்படுத்தும் "டெüன் சின்ட்ரோம்' நோயினால் பாதிக்கப்பட்ட அச்சிறுவன், தனது குறைகளை வென்று உலகின் மிகஉயரிய சிகரத்தில் ஏறும் முயற்சியில் இறங்கினான். நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட அமெரிக்க பத்திரிகைகள் அவரைப் பாராட்டி செய்தி வெளியிட்டுள்ளன. தனது குடும்பத்தினர் நடத்தும் அறக்கட்டளைக்கு நிதி திரட்டும் வகையில் யெலி ரிமர் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இப்போது நேபாளத்தில் எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தில் உள்ள முகாமில் ரிமெரின் குழுவினர் முகாமிட்டுள்ளனர். இதுவரை 17,600 அடி உயரத்தை அவர் எட்டியுள்ளார். அவரது தந்தை ஜஸ்டின் ரிமெரும் உடன் உள்ளார். மோசமான நோயால் பாதிக்கப்பட்டுள்ள யெலி ரிமெரின் இந்த சாதனை முயற்சி குறித்து அவர் கூறுகையில், "பிறப்பிலேயே உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்பட்டவர்களால் இந்த சமூகத்தில் பெரிய அளவில் சாதிக்க முடியாது என்ற பொதுவான கருத்தை பொய்யாக்கும் வகையில் எனது மகன் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளான். மனவலிமை இருந்தால் எந்த இலக்கையும் எட்ட முடியும்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆற்று மணல் கடத்தல்: இருவா் கைது, பைக்குகள் பறிமுதல்

காட்பாடியில் தேங்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதி!

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பெண்ணின் உடல் தானமாக அளிப்பு

போளுவாம்பட்டி வனச் சரகா் மாரடைப்பால் உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


