கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை: இந்தியா, சீனா பேச்சு

பயங்கரவாத எதிர்ப்பு குறித்து இந்தியா, சீனா இடையேயான ஆண்டுதோறும் நடைபெறும் பேச்சு வார்த்தை பெய்ஜிங்கில் வியாழக்கிழமை தொடங்கியது.

Updated On :12 ஏப்ரல் 2013, 12:10 am IST

பயங்கரவாத எதிர்ப்பு குறித்து இந்தியா, சீனா இடையேயான ஆண்டுதோறும் நடைபெறும் பேச்சு வார்த்தை பெய்ஜிங்கில் வியாழக்கிழமை தொடங்கியது.

இரு நாள்கள் நடைபெறும் இப்பேச்சு வார்த்தையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக கூடுதல் செயலர் நவ்தேஜ் சர்ணா தலைமையிலான உறுப்பினர்கள் பங்கேற்றனர். சீனாவின் சார்பில் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

2002-ம் ஆண்டிலிருந்து இந்த பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. "ஆப்கானிஸ்தானிலிருந்து அடுத்த ஆண்டு அமெரிக்க படை வெளியேறியபின் தலிபான் பயங்கரவாதிகளினால் அரசுக்கு ஏற்படும் அச்சுறுத்தல், பெருகி வரும் சைபர் (கணினி சார்ந்த) குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கை' ஆகியன குறித்து பேச்சுவார்த்தையின்போது விவாதிக்கப்பட்டன.

இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லைப் பிரச்னைகள் குறித்து வரும் வாரங்களில் ஆலோசிக்கப்பட உள்ளன. அதில் பங்கேற்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் சீனா செல்ல உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.