பயங்கரவாத எதிர்ப்பு குறித்து இந்தியா, சீனா இடையேயான ஆண்டுதோறும் நடைபெறும் பேச்சு வார்த்தை பெய்ஜிங்கில் வியாழக்கிழமை தொடங்கியது.
இரு நாள்கள் நடைபெறும் இப்பேச்சு வார்த்தையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக கூடுதல் செயலர் நவ்தேஜ் சர்ணா தலைமையிலான உறுப்பினர்கள் பங்கேற்றனர். சீனாவின் சார்பில் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
2002-ம் ஆண்டிலிருந்து இந்த பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. "ஆப்கானிஸ்தானிலிருந்து அடுத்த ஆண்டு அமெரிக்க படை வெளியேறியபின் தலிபான் பயங்கரவாதிகளினால் அரசுக்கு ஏற்படும் அச்சுறுத்தல், பெருகி வரும் சைபர் (கணினி சார்ந்த) குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கை' ஆகியன குறித்து பேச்சுவார்த்தையின்போது விவாதிக்கப்பட்டன.
இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லைப் பிரச்னைகள் குறித்து வரும் வாரங்களில் ஆலோசிக்கப்பட உள்ளன. அதில் பங்கேற்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் சீனா செல்ல உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராசிபுரம் தொகுதியில் சுகாதார வசதியை மேம்படுத்துவேன்: பாஜக வேட்பாளா் உறுதி

பென்னாகரத்தில் ரூ.4 லட்சம் பறிமுதல்

பாபநாசத்தில் ஐயுஎம்எல் வேட்பாளரை ஆதரித்து வைகோ பிரசாரம்

திருச்சியில் ஒன்றரை மாத ஆண் குழந்தை உயிரிழப்பு
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

