விமானத் தாக்குதல் மூலம் ஆயிரக்கணக்கான பொதுமக்களை வேண்டும் என்றே கொன்று வருகிறது சிரிய அரசு என மனித உரிமை அமைப்பு புகார் கூறியுள்ளது.
லண்டனில் ஜி-8 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை சிரிய கிளர்ச்சியாளர்கள் சந்தித்து மேலும் சக்தி வாய்ந்த ஆயுதங்களை தரும்படி கோரியுள்ள நிலையில் இப்புகார் எழுந்துள்ளது. அதிபர் பஷார் அல் ஆசாத்தை பதவியில் இருந்து அகற்றுவதற்காக தங்களுக்கு மேலும் அதிக திறன் வாய்ந்த ஆயுதங்களை வழங்க வேண்டும் என கிளர்ச்சியாளர்கள் கோரியுள்ளனர்.
நியுயார்க்கைச் சேர்ந்த மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பேக்கரிகள், மருத்துவமனைகள் என பொதுமக்கள் நடமாடும் இடங்களை குறி வைத்து சிரிய ராணுவம் விமானத்தாக்குதல் நடத்தி வருகிறது.
விமானத் தாக்குதல் மூலம் வேண்டும் என்றே பொதுமக்களை கொல்வதை போர்க்குற்றமாக கருத வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இந்த அமைப்பு ஆய்வு மேற்கொண்டது. கடந்த 2012 ஜூலை முதல் இதுவரை பொதுமக்கள் 4300 பேர் விமானத் தாக்குதல்களால் கொல்லப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கனா கண்டேனடி தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!

அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் முறைகேடு! உச்ச நீதிமன்றத்தில் மனு!

ஆனி மாதப் பலன்கள்: 12 ராசிக்காரர்களுக்கும்! எந்தெந்த ராசிக்கு பணவரவு!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


