தோ்தல் நடத்தை விதிமீறல்? பிரதமருக்கு எதிரான எதிா்க்கட்சிகளின் புகாரை ஆராய தோ்தல் ஆணையம் முடிவுநிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4% வளா்ச்சி: ஐ.நா. கணிப்புஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்!தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு: பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீஸாா்போா் நிறுத்தம் நிறைவு! ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை
/

இந்தோனேசிய சுரங்க விபத்து: சாவு எண்ணிக்கை 21 ஆக உயர்வு

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

Updated On :21 மே 2013, 9:12 pm

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்க நிறுவனமான "பி.டி.ஃப்ரீபோர்ட் இந்தோனேசியா' என்ற தங்கம் மற்றும் தாமிரச் சுரங்கம் இந்தோனேசியாவில் செயல்பட்டு வருகிறது. உலகின் மிகப் பெரிய இந்தச் சுரங்கத்தில், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்து 38 சுரங்கத் தொழிலாளர்களுக்கு கடந்த வாரம் பயிற்சி அளிக்கப்பட்டது.

அப்போது திடீரென சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர். இதில் 17 பேர் உயிரிழந்தனர். 10 பேர் மீட்புப் படையினரால் மீட்கப்பட்டனர்.  இடிபாடுகளில் சிக்கிய மற்றவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை 4 உடல்கள் மீட்கப்பட்டன.

இதையடுத்து சாவு எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மற்ற ஏழு பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என மீட்புப் படையினர் தெரிவித்தனர்.

இந்தோனேசிய அதிபர் சுசிலோ பாம்பங் உத்தரவின்பேரில் இரண்டு அமைச்சர்கள் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.