நடிகர் தனுஷின் 55-வது படத்தின் அப்டேட் போஸ்டர் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் தன்னுடைய 55-வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை தனுஷின் வுன்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கிறது.
இதில் வில்லனாக நடிகர் மம்மூட்டியும் நாயகிகளாக நடிகைகள் சாய் பல்லவி, ஸ்ரீலீலாவும் நடிக்கின்றனர். மம்மூட்டி காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார்.
இந்தப் படத்தில் தனுஷ் உளவாளியாக நடித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. திரில்லர் கதையாக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு நாளை (ஜூன் 18) வெளியாகவுள்ளதால் அதற்கான புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். கண்ணாடி மணல் கடிகையில் சிவப்பு நிறத் துகள்களில் நாயகன் சிக்கியிருப்பது போன்ற இப்போஸ்டர் ஊகங்களை எழுப்பி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.











