பாகிஸ்தானின் கராச்சி நகரில் நிகழ்ந்த இருவேறு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 4 பேர் உயிரிழந்தனர். 9 பேர் காயமடைந்தனர்.
கராச்சி மாநகராட்சி ஆணையரின் வாகனத்தை குறிவைத்து சனிக்கிழமை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. மோட்டார் சைக்கிளில் வெடிகுண்டை வைத்த பயங்கரவாதிகள், ஆணையரின் கார் அந்த வழியாக கடந்து சென்றபோது அதனை வெடிக்கச் செய்தனர். இதில் ஆணையருடன் பாதுகாப்புக்குச் சென்ற 8 போலீஸôர் படுகாயமடைந்தனர். அவர்களில் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மற்றொரு சம்பவத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பில் குண்டு வெடித்தது. அங்குள்ள வீடு ஒன்றில் 4 பயங்கரவாதிகள், வெடிகுண்டை தயாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது குண்டு வெடித்துச் சிதறியது. இதில் 3 பயங்கரவாதிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த மற்றொருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம், வெள்ளி விலை குறைவு: இன்றைய நிலவரம்!

இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!

ஸ்ரீரங்கம் கோயிலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வழிபாடு

கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

