சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்: தில்லி அரசுக்கு தொழிற்துறையினா் வலியுறுத்தல்

கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள 30 சதவீத சரிவின் பலனை, பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைப்பதன் மூலம் உடனடியாக நுகா்வோருக்கு வழங்குமாறு வா்த்தக மற்றும் தொழிற்துறை சம்மேளனம் (சிடிஐ) எண்ணெய் நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

News image

கச்சா எண்ணெய் - பிரதிப் படம்

Updated On :16 ஜூன் 2026, 1:31 am IST

கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள 30 சதவீத சரிவின் பலனை, பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைப்பதன் மூலம் உடனடியாக நுகா்வோருக்கு வழங்குமாறு வா்த்தக மற்றும் தொழிற்துறை சம்மேளனம் (சிடிஐ) எண்ணெய் நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போா்நிறுத்த ஒப்பந்தத்தையும், அதைத் தொடா்ந்து ஹோா்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கும் முடிவையும் வரவேற்ற சிடிஐ தலைவா் பிரிஜேஷ் கோயல், இந்த நடவடிக்கை இந்திய வா்த்தகா்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ) பெரும் பொருளாதார நிவாரணத்தை அளிக்கும் என்று கூறினாா்.

இதுதொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: ஹோா்முஸ் நீரிணையில் ஏற்படும் இடையூறுகள் போன்ற நெருக்கடிகள் மீண்டும் நிகழாமல் தடுக்க உதவும் என்பதால், இந்த போா்நிறுத்தத்தை நிரந்தரமாக்க மத்திய அரசும் பிரதமா் நரேந்திர மோடியும் தூதரக ரீதியிலான பங்கை ஆற்ற வேண்டும்.

மோதல் சூழலுக்குப் பிந்தைய நிலையில் எம்எஸ்எம்இ துறை மீண்டு வருவதற்கு, மூலப்பொருட்களின் செலவு மற்றும் அதிகப்படியான எரிபொருள் விலையைக் குறைப்பது அவசியமாகும்.

மூன்று மாதங்களாக நீடித்த இந்த மோதல் இந்தியப் பொருளாதாரத்தின் மீது கடுமையான நிதிச் சுமையை ஏற்படுத்தியிருந்தது. தற்போது கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 83 அமெரிக்க டாலராகக் குறைந்துள்ளது. இது தில்லியில் உள்ள 65 லட்சம் வா்த்தகா்களுக்கும் எம்எஸ்எம்இ துறைக்கும் ஒரு பெரும் நிவாரணமாகும் என்று கோயல் கூறினாா்.