யேமனில் அல்-காய்தா பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 5 வீரர்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவம், ஷபவா மாகாணம், பல்ஹஃப் முனையத்துக்கு அருகே உள்ள ராணுவ சோதனைச் சாவடியில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
காரில் வந்த பயங்கரவாதிகள் ராணுவ வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்ஹஃப் முனையத்திலிருந்துதான் யேமனிலிருந்து வெளிநாடுகளுக்கு குழாய் வழியாக எரிவாயு ஏற்றுமதி செய்யப்படுகிறது. எரிவாயுக் குழாய்களை தாக்கவும் அல்-காய்தா பயங்கரவாதிகள் குறி வைத்துள்ளனர். அதேபோல், ஹத்ரமவட் மாகாணத்தில் உள்ள கனடாவின் மினல்-தபா எண்ணெய் முனையத்தை தாக்கி, ஊழியர்களை பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கவும் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக அரசு செய்தித் தொடர்பாளர் ராஜேஷ் பாடி தெரிவித்தார்.
பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் தாற்காலிமாக மூடப்பட்டன. யேமனில் உள்ள தூதரகத்தைத் தவிர, மற்ற நாடுகளில் உள்ள தூதரகத்தை அமெரிக்கா கடந்த வெள்ளிக்கிழமை திறந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அனுராக பௌர்ணமி ஆஷா போஸ்லே!

”10,000 கையொப்பங்களுடன் மனு! அரசு பதில் கட்டாயம்” புதிய அறிவிப்புகளை வெளியிட்ட விஜய்!

இந்த வாரம் கலாரசிகன் - 12-04-2026

உக்ரைன், அமெரிக்கா சரி... மீனவர் பிரச்னையில் இலங்கையிடம் மெளனம் ஏன்?
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

