ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

யேமனில் அல்-காய்தா தாக்குதல்: 5 வீரர்கள் சாவு

யேமனில் அல்-காய்தா பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 5 வீரர்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவம், ஷபவா மாகாணம், பல்ஹஃப் முனையத்துக்கு அருகே உள்ள ராணுவ சோதனைச் சாவடியில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

Updated On :11 ஆகஸ்ட் 2013, 7:36 pm

யேமனில் அல்-காய்தா பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 5 வீரர்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவம், ஷபவா மாகாணம், பல்ஹஃப் முனையத்துக்கு அருகே உள்ள ராணுவ சோதனைச் சாவடியில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

காரில் வந்த பயங்கரவாதிகள் ராணுவ வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல்ஹஃப் முனையத்திலிருந்துதான் யேமனிலிருந்து வெளிநாடுகளுக்கு குழாய் வழியாக எரிவாயு ஏற்றுமதி செய்யப்படுகிறது. எரிவாயுக் குழாய்களை தாக்கவும் அல்-காய்தா பயங்கரவாதிகள் குறி வைத்துள்ளனர். அதேபோல், ஹத்ரமவட் மாகாணத்தில் உள்ள கனடாவின் மினல்-தபா எண்ணெய் முனையத்தை தாக்கி, ஊழியர்களை பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கவும் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக அரசு செய்தித் தொடர்பாளர் ராஜேஷ் பாடி தெரிவித்தார்.

பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் தாற்காலிமாக மூடப்பட்டன. யேமனில் உள்ள தூதரகத்தைத் தவிர, மற்ற நாடுகளில் உள்ள தூதரகத்தை அமெரிக்கா கடந்த வெள்ளிக்கிழமை திறந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.