தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

டைம் இதழின் ஆண்டின் சிறந்த மனிதராக ஜெர்மனி அதிபர் மெர்கல் தேர்வு

டைம் இதழின் ஆண்டின் சிறந்த மனிதராக ஜெர்மனியின் அதிபர் ஏஞ்சலா மெர்கல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

News image
Updated On :9 டிசம்பர் 2015, 1:53 pm

டைம் இதழின் 2015 ஆம் ஆண்டின் சிறந்த மனிதராக ஜெர்மனியின் அதிபர் ஏஞ்சலா மெர்கல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவிலிருந்து வெளியாகும் டைம் இதழம் ஆண்டுதோறும் செய்திகளில் அதிகமாக இடம்பிடித்தவர்களில் ஒருவரை சிறந்த மனிதராக தேர்வு செய்து வருகிறது.

இந்த ஆண்டின் சிறந்த மனிதராக ஜெர்மனியின் அதிபர் ஏஞ்சலா மெர்கலை டைம் இதழின் ஆசிரியர் குழு தேர்வு செய்துள்ளது.

ஐரோப்பிய கண்டத்தில் நிலவி வரும் பொருளாதார வீழ்ச்சி மற்றும் தற்போதைய அகதிகள் பிரச்னை ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்ட மெர்கலின் தலைமைத்துவத்தை பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான போட்டியில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை, ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் மற்றும் பாகிஸ்தானின் மலலா ஆகியோர் இருந்தனர்.

இவர்கள் தவிர  இந்தியாவின் தொழிலதிபர் முகேஷ் அம்பானி, அமெரிக்க அதிபர் ஒபமா, ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர் அபுபக்கர், ஹிலாரி கிளின்டன், நோபல் பரிசு வென்ற பாகிஸ்தானின் மலாலா உள்ளிட்ட 58 பேர் போட்டியில் இருந்தனர். இவர்களிலிருந்து எட்டு பேர் இறுதி செய்யப்பட்ட நிலையில், டைம் இதழின் ஆசிரியர் குழு ஏஞ்சலா மெர்கலை இந்த ஆண்டின் சிறந்த மனிதராக தேர்வு செய்து இன்று அறிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.