இலங்கையில் விசா முறைகேடு சம்பவத்தில் ஈடுபட்டதாக 159 இந்தியர்கள் உள்பட 402 பேர் நிகழ் ஆண்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முறைகேடாக வேலைவாய்ப்பு பெறுதல், மதத்தை பரப்புதல் உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களுக்காக அவர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை உள்விவகாரத் துறை அமைச்சர் எஸ்.பி.நவின்நா இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பிச்சை எடுத்தது தொடர்பாக மூன்று வெளிட்டாவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பலர் தவறான தகவல்களை அளித்து அதிக நாள்கள் இலங்கையில் தங்கியுள்ளனர். மேலும், 83 பேர் தவறான தகவல்களை அளித்து வேலையும் பெற்றுள்ளனர் என்றார்.
மாலத்தீவு மற்றும் சிங்கப்பூர் நாட்டவர்களுக்கு மட்டும் இலங்கை வந்தடையும் போது விசா வழங்கப்படுகிறது. மற்ற நாட்டவர் அனைவரும் விசா பெற்றப்பின்னரே இலங்கை வர முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.