மெக்சிகோ பட்டாசு சந்தையில் வெடி விபத்து: 29 பேர் பலி!

மெக்சிகோவின்  டுல்ட்டப் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற பட்டாசு சந்தையில் நேற்று நிகழ்ந்த வெடி விபத்தில் 29 பேர் பலியானார்கள்
மெக்சிகோ பட்டாசு சந்தையில் வெடி விபத்து: 29 பேர் பலி!

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவின்  டுல்ட்டப் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற பட்டாசு சந்தையில் நேற்று நிகழ்ந்த வெடி விபத்தில் 29 பேர் பலியானார்கள்

மெக்சிகோவின்  தலைநகரான மெக்சிகோ சிட்டியின் வடக்கே 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள  டுல்ட்டப் நகரில் அமைந்துள்ளது பப்லிட்டோ பட்டாசு சந்தை. இங்கே உள்ளூர் நேரப்படி நேற்று மதியம் 3 மணி அளவில் கடும்வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 26 பேர் பலியானார்கள். 

இது குறித்து மெக்சிகோ மாகாண ஆளுநர் எருவெய்ல் அவிலா செய்தியாளர் சந்திப்பில்கூறியதாவது:

பப்லிட்டோ பட்டாசு சந்தையில் நடந்த வெடி விபத்தில் 29 பேர் பலியானார்கள். சம்பவ இடத்திலேயே 26 பேரும், பின்னர் மருத்துவமனையில் 3 பேரும் மரணமடைந்தனர். இந்த விபத்தில் 70 பேர் காயமடைந்தனர்.      அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com