கண் அறுவை சிகிச்சைக்காக 14 வயது சிறுவன் கடத்தி கொலை

கொல்கத்தாவின் பர்பகன் நகரத்தில் 14 வயது சிறுவன் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Updated on
1 min read

கொல்கத்தாவின் பர்பகன் நகரத்தில் 14 வயது சிறுவன் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பர்பகன் நகரத்தில் வசித்து வருபவர் பிட்டு தாஸ் (14), ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன். கடந்த ஞாயிறன்று இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.

பதற்றத்தில் இருந்த பெற்றோருக்கு திடீரென தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் சுபாசிஸ் தாஸ் என்று நபர் தொலைபேசியில் பேசினான். தங்கள் மகனை கடத்தி வைத்துள்ளதாகவும், ரூ.50 ஆயிரம் கொடுத்து மகனை மீட்டிக்கொள்ளுங்கள். இல்லையெனில் தங்கள் மகனை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளான்.

சிறுவனின் தந்தை நிர்மல் தாஸ் பணம் தர மறுத்துவிட்டதால் சிறுவன் அநியாயமாக கொல்லப்பட்டான். பின்னர் போலீசார் உதவியுடன் மொபைல் கோபுரம் மூலம் மர்ம நபரை கைது செய்தனர். பின்னர், குற்றவாளியிடம் விசாரணை நடத்துகையில், சிறுவனை கடத்தி கொலை செய்ததாக தன்னுடைய குற்றத்தை ஒப்பு கொண்டான். தனக்கு கண் அறுவை சிகிச்சை செய்வதற்காக பணம் தேவைப்பட்டது. அதனால், சிறுவனை கடத்தி கொலை செய்ததாக குற்றவாளி தன்னுடைய குற்றத்தை ஒப்பு கொண்டான். அதன்பின்னர், அவன் கைது செய்யப்பட்டதாக மூத்த காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com