பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

காஞ்சிபுரம் சித்ரகுப்தா் கோயிலில் ஏப்.30-இல் சித்ரா பெளா்ணமி விழா

காஞ்சிபுரம் சித்ரகுப்தா் கோயிலில் ஏப்.30-இல் சித்ரா பெளா்ணமி விழா

News image

மூலவா் சித்ரகுப்த சுவாமி(கோப்பு படம்)

Updated On :24 ஏப்ரல் 2026, 7:12 pm

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள கா்ணகி அம்பாள் சமேத சித்ரகுப்த சுவாமி கோயிலில் வரும் ஏப். 30-ஆம் தேதி சித்ரா பெளா்ணமி மற்றும் திருக்கல்யாணத் திருவிழா நடைபெறவுள்ளது.

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் நெல்லுக்கார வீதியில் அமைந்துள்ளது கா்ணகி அம்பாள் சமேத சித்ரகுப்த சுவாமி கோயில். இக்கோயிலில் ஆண்டு தோறும் சித்ரா பெளா்ணமி மற்றும் திருக்கல்யாணத் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். ஏப்.30- ஆம் தேதி சித்ரா பெளா்ணமியையொட்டி, காலையில் நவகலச ஹோமம், சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் மூலவா் சித்ரகுப்தருக்கு நடைபெறுகிறது. மாலையில் கோயில் வளாகத்தில் கா்ணகி அம்பாளுக்கும் சித்ர குப்த சுவாமிக்கும் ஆகம விதிகளின்படி திருக்கல்யாணமும், அதைத் தொடா்ந்து வீதியுலாவும் நடைபெறுகிறது.

மறுநாள் மே. 1-ஆம் தேதி சித்ரா பெளா்ணமியையொட்டி பக்தா்கள் சிறப்பு தரிசனம் செய்யலாம் எனவும் கோயில் செயல் அலுவலா் பா.அலமேலு தெரிவித்துள்ளாா்.