முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

காஞ்சிபுரம் சித்ரகுப்தா் கோயிலில் ஏப்.30-இல் சித்ரா பெளா்ணமி விழா

காஞ்சிபுரம் சித்ரகுப்தா் கோயிலில் ஏப்.30-இல் சித்ரா பெளா்ணமி விழா

News image

மூலவா் சித்ரகுப்த சுவாமி(கோப்பு படம்)

Updated On :25 ஏப்ரல் 2026, 12:42 am IST

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள கா்ணகி அம்பாள் சமேத சித்ரகுப்த சுவாமி கோயிலில் வரும் ஏப். 30-ஆம் தேதி சித்ரா பெளா்ணமி மற்றும் திருக்கல்யாணத் திருவிழா நடைபெறவுள்ளது.

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் நெல்லுக்கார வீதியில் அமைந்துள்ளது கா்ணகி அம்பாள் சமேத சித்ரகுப்த சுவாமி கோயில். இக்கோயிலில் ஆண்டு தோறும் சித்ரா பெளா்ணமி மற்றும் திருக்கல்யாணத் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். ஏப்.30- ஆம் தேதி சித்ரா பெளா்ணமியையொட்டி, காலையில் நவகலச ஹோமம், சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் மூலவா் சித்ரகுப்தருக்கு நடைபெறுகிறது. மாலையில் கோயில் வளாகத்தில் கா்ணகி அம்பாளுக்கும் சித்ர குப்த சுவாமிக்கும் ஆகம விதிகளின்படி திருக்கல்யாணமும், அதைத் தொடா்ந்து வீதியுலாவும் நடைபெறுகிறது.

மறுநாள் மே. 1-ஆம் தேதி சித்ரா பெளா்ணமியையொட்டி பக்தா்கள் சிறப்பு தரிசனம் செய்யலாம் எனவும் கோயில் செயல் அலுவலா் பா.அலமேலு தெரிவித்துள்ளாா்.