தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

இராக்கில் வெடிகுண்டு நிரப்பிய லாரியைக் கொண்டு தாக்குதல்: 51 பேர் பலி

இராக்கில் வெடிகுண்டு நிரப்பப்பட்ட டேங்கர் லாரியைக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் 20 ராணுவ வீரர்கள் உள்பட 51 பேர் பலியாகினர்.

Updated On :7 மார்ச் 2016, 5:14 am

இராக்கில் வெடிகுண்டு நிரப்பப்பட்ட டேங்கர் லாரியைக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் 20 ராணுவ வீரர்கள் உள்பட 51 பேர் பலியாகினர்.

தலைநகர் பாக்தாதுக்கு தெற்கே உள்ள ஹில்லா நகர எல்லையில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.

சோதனைச் சாவடியைக் குறி வைத்து, சரக்கு லாரி மூலம் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 இது குறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:

போக்குவரத்து நெரிசல் மிகுந்த காலை வேளையில், சோதனைச் சாவடியைக் கடந்து செல்ல முயன்ற சரக்கு லாரியை வீரர்கள் தடுத்து நிறுத்தினர்.

சோதனைக்காக அதனை ஓரமாக நிறுத்துமாறு வீரர்கள் உத்தரவிட்டனர். அப்போது அந்த லாரியில் பொருத்தப்பட்டிருந்த சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.

இதில் 20 வீரர்கள் உள்பட 51 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 72 பேர் காயமடைந்தனர். காயமடைந்த 11 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த தாக்குதலில் பலியான பெரும்பாலானோர் காரில் வந்த பொதுமக்கள். இவர்கள் சோதனைச் சாவடி வரிசையில் காத்திருந்த போது பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இராக்கில் கணிசமான பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள், அந்நாட்டில் பல இடங்களில் வெடிகுண்டுத் தாக்குதல்களை நிகழ்த்தி வருகின்றனர்.

எனினும் ஹில்லா பகுதி அரசுக் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.