வங்கதேசத்தில் களைகட்டியது ஹோலி பண்டிகை

நாடு முழுவதும்  ஹோலி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
வங்கதேசத்தில் களைகட்டியது ஹோலி பண்டிகை
Updated on
1 min read

நாடு முழுவதும்  ஹோலி பண்டிகை மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

வங்கதேசத்தில்  இந்து மதத்தை சேர்ந்தவர்களும் ஹோலி பண்டிகையில் பங்கேற்று ஒருவொருக்கொருவர் வண்ணப்பூச்சுகள் பூசிக்கொள்ளுதல், இனிப்புகளை பரிமாறிக்கொள்ளுதல்,  வானவேடிக்கைகள், கேளிகைகள் என கொண்டாடி வருகின்றனர்.

தலைநகர் தாக்காவில் பெங்காலி இந்துக்கள் துர்கா பூஜைக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர்.  அம்மனுக்கு சடங்கு வழிபாடு செய்தல் என அவர்களின் முக்கிய விழாக்களில் ஒன்றாக ஹோலி கருதப்படுகின்றது.

அதே போன்று, தாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் வர்ணங்களை தெளித்தும், ஆடல், பாடல் என கொண்டாடி மகிழ்ந்தனர். ஹோலியில் தங்களின் மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்ளும் விதமாக அவர்களின் இஸ்லாமிய நண்பர்களும் இவ்விழாவில் பங்கேற்கின்றனர்.

இந்திய மக்கள் அனைவரும் சகோதர-சகோதரிகள் என்பதை எடுத்துக்காட்டும் விதமான இந்தப் பண்டிகை அமைகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com