அமெரிக்க அதிபர் - ஜப்பான் பிரதமர் அடுத்த வாரம் சந்திப்பு!
புதிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே அடுத்த வாரம் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


டோக்கியோ: புதிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே அடுத்த வாரம் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பரபரப்பாக நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் அமோக வெற்றி பெற்றார். இந்நிலையில் புதிய அதிபர் டொனால்டு டிரம்பை ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே அடுத்த வாரம் சந்திக்க உள்ளார்.
இது குறித்து ஜப்பான் அமைச்சரவை கேபினட் செயலாளர் யோஷிகிடெ சுகா இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அபேவும் டிரம்பும் நேற்று தொலைபேசியில் பேசினார்கள். அப்போது இரு தரப்பு நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து உரையாடினர்.
இரண்டு தலைவர்களுக்கிடையேயான சந்திப்பு வருகின்ற நவம்பர் 17-ம் தேதி நியூயார்க் நகரில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சந்திப்பயந்து இருதரப்பினருக்கு இடையேயான நல்ல நம்பிக்கையை வளர்க்க நல்லதொரு தொடக்கமாக அமையும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...