விவசாயிகளுக்காக ஒருமுறை அல்ல 100 முறைகூட கைதாவேன்! உதயநிதி ஸ்டாலின் பதிவுதவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்- நாளை வேளாண் பட்ஜெட் 2029-இல் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்: நிா்மலா சீதாராமன் எண்ம கைது மோசடிகளைத் தடுக்க தேசிய அளவில் நடவடிக்கைகள்- உச்சநீதிமன்றம் உத்தரவு இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்: 13 இந்திய மாலுமிகள் மீட்பு புதுச்சேரியில் 2 ரயில்கள் சேவை 7 நாள்களுக்கு ரத்து
/

காபூல் மசூதியில் குண்டுவெடிப்பு: 20 பேர் பலி!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஷியா பிரிவு மசூதி ஒன்றில் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 20 பேர் பலியாகினர். மேலும் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

News image
Updated On :25 ஜனவரி 2024, 12:15 am IST

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஷியா பிரிவு மசூதி ஒன்றில் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 20 பேர் பலியாகினர். மேலும் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு மேற்கே அமைந்துள்ளது தாருல் அமன் பகுதி. இங்கு ஷியா பிரிவு இஸ்லாமியர்களின் புகழ்பெற்ற வழிபாட்டுத் தலமான பகீர் உல் உலூம் மசூதி அமைந்துள்ளது. அங்கு இன்று காலை புகுந்த தற்கொலை படை தீவிரவாதி ஒருவன் தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான்.  

இந்த சம்பவத்தில் 20 பலியாகினர். மேலும் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இது காபூலில் இன்று நடைபெறும் இரண்டாவது குண்டுவெடிப்பு சம்பவமாகும். முன்னதாக பகிராமி மாவட்டத்தில் நிகழ்ந்த மற்றொரு குண்டு வெடிப்பில் இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.