மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சீனாவில் நிலச்சரிவில் சிக்கிய 33 பேரைக் காணவில்லை !

சீனவில் ஜீஜியாங் மாகாணத்தில் கடும் மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 33 பேரைக் காணவில்லை.

News image
Updated On :29 செப்டம்பர் 2016, 12:35 pm

சீனவில் ஜீஜியாங் மாகாணத்தில் கடும் மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 33 பேரைக் காணவில்லை.

இது பற்றிய விபரம் வருமாறு:

சீனாவில் மேகி புயலின் காரணமாக கடுமையான மழை பொழிந்து வருகிறது. இதனால் ஜீஜியாங் மாகாணத்தில் உள்ள சுகுன் கிராமத்தில் நேற்று இரவு கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த கிராமத்திலிருந்தவர்களில் 27 பேரைக் காணவில்லை என்று சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதேபோல் பயோபிங் என்ற கிராமத்திலும் 6 பேரைக் காணவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது பற்றி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சீனாவில் ஜீஜியாங் மாகாணத்தில் பெய்த பெருமழை மற்றும் நிலச்சரிவின் காரணமாக 20 வீடுகள்  மண்ணில்  புதைந்துள்ளன மேலும் 17 வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன.

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.