ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பாகிஸ்தானுக்கு எதிராகத் தொடுக்கப்படும் எந்த அச்சுறுத்தலையும் சந்திக்கத் தயார்: நவாஸ் ஷெரீஃப்

பாகிஸ்தானுக்கு எதிராகத் தொடுக்கப்படும் எந்த அச்சுறுத்தலையும் சந்திக்கத் தயார் என்று அந்த நாட்டின் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்

News image
Updated On :12 ஏப்ரல் 2017, 3:27 am

DIN

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கு எதிராகத் தொடுக்கப்படும் எந்த அச்சுறுத்தலையும் சந்திக்கத் தயார் என்று அந்த நாட்டின் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.
குல்பூஷண் ஜாதவ் விவகாரத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவும் நிலையில் நவாஸ் ஷெரீஃப் இவ்வாறு பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் விமானப் படை சார்பில் கைபர்-பாக்துன்குவாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் நவாஸ் ஷெரீஃப் பங்கேற்றுப் பேசியதாவது:
பாகிஸ்தான், அமைதியை விரும்பும் நாடு. பிற நாடுகளுடன், குறிப்பாக அதன் அண்டை நாடுகளுடன் நல்லுறவைப் பேணுவதே பாகிஸ்தானின் கொள்கையாகும்.
அதேசமயம், பாகிஸ்தானுக்கு எதிராகத் தொடுக்கப்படும் எந்த அச்சுறுத்தலையும் சந்திக்கத் தயாராகவே உள்ளோம். நாட்டின் பாதுகாப்புப் படையின் மீது பாகிஸ்தானுக்கு முழு நம்பிக்கை உள்ளது. நவீன கால சவால்களை சந்திக்கும் வகையில் பாதுகாப்புப் படையினருக்குத் தேவைப்படும் ஆதரவை அரசு அளிக்கும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.