தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

'வட கொரியா தாக்குதலை தொடங்கினால் அமெரிக்கா பதிலடி'

அமெரிக்கா அல்லது அதன் நட்பு நாடுகளைக் குறி வைத்து வட கொரியா தாக்குதலைத் தொடங்குமானால், உடனடியாக பதிலடித் தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர்

News image
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில்பேச்சுவார்த்தை நடத்திய ஜப்பான் பாதுகாப்புத் துறை அமைச்சர் இட்ஸுநோரி ஓனோடேரா, வெளியுறவுத் துறை அமைச்சர் டாரோ கோனோ, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர்
Updated On :18 ஆகஸ்ட் 2017, 7:07 pm

DIN

அமெரிக்கா அல்லது அதன் நட்பு நாடுகளைக் குறி வைத்து வட கொரியா தாக்குதலைத் தொடங்குமானால், உடனடியாக பதிலடித் தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் எச்சரிக்கை விடுத்தார்.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன், அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பான் வெளியுறவுத் துறை அமைச்சர் டாரோ கோனோ, ஜப்பானிய பாதுகாப்புத் துறை அமைச்சர் இட்ஸுநோரி ஓனோடேரா ஆகியோருடன் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது:
ராணுவ ரீதியாக அமெரிக்கா எதற்கும் தயாரான ஆயத்த நிலையில் உள்ளது. அமெரிக்காவின் கூட்டு நாடுகளும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஆயத்த நிலையில் உள்ளன. வட கொரியாவின் தாக்குதல் மிரட்டலை செயல்படுத்தினால் உடனடியாக பதிலடித் தாக்குதல் நிகழ்த்துவோம். ஆனால் போர் என்ற வழிமுறையை அமெரிக்கா தேர்ந்தெடுக்காது என்று அதிபர் டிரம்ப் ஏற்கெனவே திட்டவட்டமாக கூறியுள்ளார். ஆனால் அமெரிக்காவையோ, அதன் கூட்டு நாடுகளையோ குறி வைத்து எவராவது தாக்குதல் நிகழ்த்தினால், உடனடியாக பதிலடி தரத் தயாராக இருக்கிறோம். தென் கொரியா, குவாம் தீவுகள், ஜப்பான் ஆகிய இடங்களைக் குறி வைத்து ஏவுகணை வீசப்பட்டால் அதனை நடுவானில் சுட்டு வீழ்த்துவோம். அமெரிக்காவின் கூட்டு நாடுகளுக்கு எந்த வகையானஅச்சுறுத்தல் வந்தாலும் அமெரிக்கா அதனை உறுதியுடன் எதிர்த்து நடவடிக்கை எடுக்கும் என்றார் ஜேம்ஸ் மேட்டிஸ்.
ஜப்பான் பாதுகாப்புத் துறை அமைச்சர் இட்ஸுநோரி ஓனோடேரா கூறுகையில், கூட்டு நாடு என்ற முறையில் ஜப்பானின் பாதுகாப்பை உறுதி செய்ய அமெரிக்கா எல்லா நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது திருப்தி அளிப்பதாக இருக்கிறது; எங்களது ஏவுகணைத் தடுப்பு தளவாடங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. ஜப்பான் தன்னைத் தற்காத்துக் கொள்ள முழு ஆயத்த நிலையில் உள்ளது என்றார்.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் கூறியது: பேச்சுவார்த்தை நடத்த வட கொரியா முன்வர வேண்டும். உண்மையிலேயே அமைதியை விரும்பி பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும்.
இதற்கு முந்தைய காலங்களில் இருந்ததுபோன்ற நிலை இப்போது இல்லை. நிலைமை மிகவும் தீவிரமடைந்துள்ளது. வட கொரியாவிடம் இப்போது ஆயுத பலம் உள்ளது.
அதனால் அந்த நாடு மேலும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். தவறாக ஒரு அடி எடுத்து வைத்தாலும் அந்நாட்டுக்கு அது மிகக் கடுமையான விளைவை ஏற்படுத்தும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.