6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இனி சீனாவுக்கு போக வேண்டுமென்றால் விமான நிலையத்தில் கைரேகை வைக்க வேண்டும்! 

இனி சீனாவிற்கு பயணம் செய்ய விரும்பும் வெளிநாட்டினர் அந்நாட்டிற்குள் நுழைவதற்குள் விமான நிலையத்தில் தங்கள் கைரேகைகளை பதிவு செய்ய வேண்டுமென்றுஅந்நாட்டின் ...

News image
Updated On :9 பிப்ரவரி 2017, 9:16 am

DIN

பீஜிங்: இனி சீனாவிற்கு பயணம் செய்ய விரும்பும் வெளிநாட்டினர் அந்நாட்டிற்குள் நுழைவதற்குள் விமான நிலையத்தில் தங்கள் கைரேகைகளை பதிவு செய்ய வேண்டுமென்று அந்நாட்டின் பொது பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.  

இது தொடர்பாக பொது பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு:

இந்த வருடம் முழுவதும் நாடு முழுவதும் நாட்டுக்கு உள்ளே நுழைபவர்கள் மற்றும் வெளியே செல்பவர்கள் குறித்த விபரங்களை பதிவு செய்யும் துறைகளில் இனி கைரேகை பதிவுகளும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தூதரக  ரீதியிலான பாஸ்போர்ட் பெற்றுள்ளவர்கள் மற்றும் பரஸ்பர ஒப்பந்தங்கள் செய்யயப்பட்டுள்ளவர்களுக்கு மட்டும் இந்த கட்டாயத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறையானது முதன்முறையாக வரும் வெள்ளிக்கிழமையில் இருந்து ஷென்ஸென் விமான நிலையத்தில் அமல் செய்யப்பட உள்ளது. 

இந்த தகவலை சின்ஹுவா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.