பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

சிரியாவில் டேங்கர் லாரி குண்டு வெடிப்பு: ஐம்பது பேர் பலி!

சிரியாவின் அலெப்போ மாகாணத்துக்குட்பட்ட அஜாஸ் நகரில் தீவிரவாதிகள் சனிக்கிழமை அன்று நடத்திய டேங்கர் குண்டு தாக்குதலில் 48 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயமடைந்தனர்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 10:42 am

DIN

டமாஸ்கஸ்: சிரியாவின் அலெப்போ மாகாணத்துக்குட்பட்ட அஜாஸ் நகரில் தீவிரவாதிகள் சனிக்கிழமை அன்று நடத்திய டேங்கர் குண்டு தாக்குதலில் 48 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயமடைந்தனர்.

சிரியா மற்றும் துருக்கி நாடுகளுக்கு இடையில் அலெப்போ மாகாணம் அமைந்துள்ளது. இங்குள்ள பல பகுதிகள்  சிரியாவை சேர்ந்த போராளி குழுக்களின் பிடியில் உள்ளன. அப்பகுதிகளை மீட்பதற்காக துருக்கி விமானப்படையின் துணையுடன் சிரியப் படைகள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் சிரியாவின் அலெப்போ மாகாணத்திற்குட்பட்ட அஜாஸ் நகர நீதிமன்றம் அருகே  தீவிரவாதிகள் நேற்று நடத்திய டேங்கர் வெடிகுண்டு தாக்குதலில் 48 பேர் உயிரிழந்தனர். பலர் பலத்த காயமடைந்தனர். இதனால் பலி எணிக்கை மேலும் உயரக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.