மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தமிழில் பொங்கல் வாழ்த்து, சிலம்ப விளையாட்டு: அசத்தும் கனடா நாட்டுப் பிரதமர்! 

உலகத் தமிழர்களின் விழாவான பொங்கல் திருநாளுக்கு தமிழில் வாழ்த்து சொல்லி அனைவரையும் அசத்திய கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் டுருடோ,..

News image
Updated On :16 ஜனவரி 2017, 9:44 am

DIN

டொரான்ட்டோ: உலகத் தமிழர்களின் விழாவான பொங்கல் திருநாளுக்கு தமிழில் வாழ்த்து சொல்லி அனைவரையும் அசத்திய கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் டுருடோ, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் விளையாடும் புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

கனடா நாட்டின் பிரதமரக இருப்பவர் ஜஸ்டின் டுருடோ. இவர் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முழுவதையும் அங்கு வசிக்கும் தமிழர்களின் கலாச்சார மாதமாக கடந்த ஆண்டு பாராளுமன்றத்தின் மூலம் அறிவிப்பு செய்தார். இதற்கு அங்குவாழும் தமிழ் சமூகத்தினர் அனைவரும் வரவேற்பு தெரிவித்தனர். 

இந்த நிலையில் ஜஸ்டின் டுருடோ நேற்று சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோ செய்தி ஒன்றில் அந்நாட்டில் வாழும் தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்திருந்தார்.அதில் அவர், ‘வணக்கம்' என்று கூறி தமிழில் தொடங்கி,  கனடாவாழ் தமிழர்களும், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும் தங்கள் அன்புக்குரியவர்களுடன் சேர்ந்து தைப்பொங்கலை கொண்டாடுகின்றனர். இந்த பொங்கல் பண்டிகையானது விசேஷ அர்த்தமும், பாரம்பரியமும் கொண்டது. அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்தது. கனடாவாழ் தமிழர்கள் இந்த நாட்டை வலிமையான, வளமான நாடாக ஆக்கியவர்கள் என்று பாராட்டியிருந்தார். உரையை முடிக்கும் போது ‘இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்’ என்று தமிழில் கூறி முடித்திருந்தார். 

இது தமிழர்கள் அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திய வேளையில் கடந்த 2015-ம் ஆண்டு கனடா நாட்டு தமிழர்கள் நடத்திய பாரம்பரிய விழா ஒன்றில் பங்கேற்ற பிரதமர் ஜஸ்டின் டுரூடோ, அங்குள்ள தமிழர்களுடன்  சேர்ந்து சிலம்பம் விளையாடினார்.

இந்த புகைப்படமானது தற்போது இணையதளத்தில் வைரலாக அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.