28 சீன சுற்றுலா பயணிகளுடன் சென்ற படகு மாயம்: மலேசிய அதிகாரிகள் அறிவிப்பு!

சீன சுற்றுலா பயணிகள் 28 பேருடன் மலேசியாவில் பயணம் செய்த சுற்றுலா படகு ஒன்று திடீரென மாயமானதாக அரசுத் தரப்பு வெளியிட்டுள்ள தகவல் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
28 சீன சுற்றுலா பயணிகளுடன் சென்ற படகு மாயம்: மலேசிய அதிகாரிகள் அறிவிப்பு!
Published on
Updated on
1 min read

கோலாலம்பூர்: சீன சுற்றுலா பயணிகள் 28 பேருடன் மலேசியாவில் பயணம் செய்த சுற்றுலா படகு ஒன்று திடீரென மாயமானதாக அரசுத் தரப்பு வெளியிட்டுள்ள தகவல் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

சீனாவில் இருந்து மலேசியாவுக்கு 28 சீனர்கள் சுற்றுலா சென்றனர் .அவர்கள்  கிழக்கு சபா மாகாணத்தில் உள்ள போர்னியோ தீவுக்கு படகில் புறப்பட்டு  சென்றனர். கோட்டா கினாபாலு என்ற இடத்தின் அருகே சென்ற போது மேலும் 3 உள்நாட்டினர் அந்த படகில் ஏறியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.திடீரென அந்தப் படகு மாயமானது என அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தற்போது படகை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.  நேற்று தட்பவெப்பநிலை மோசமாக இருந்தது. எனவே படகு விபத்தில் எதிலும் சிக்கி கடலில் மூழ்கியிருக்கலாம் என்ற அச்சமம் நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com