கியூபெக்: கனடாவின் கியூபெக் நகரத்தில் உள்ள மசூதி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 6 பேர் பலியானார்கள். மேலும் 8 பேர் படுகாயமடைந்தனர்.
கனடாவின் கியூபெக் நகரத்தில் இஸ்லாமிய கலாச்சார மையம் ஒன்று அமைந்துள்ளது. அதன் வளாகத்தில் வழிபாடு மசூதியொன்றும் அமைந்துள்ளது.அங்கெ உள்ளூர் நேரப்படி இரவு 8 மணி அளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது. அப்பொழுது அங்கே கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள் . மேலும் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்திற்குள் இந்த செயலில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டு விட்டதாகவும், மேலும் ஒருவனை போலீசார் தேடி வருவதாகவும், கனடாவின் சி.பி.சி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த துயர சம்பவத்திற்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடு வருத்தம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதே பள்ளிவாசலில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெட்டப்பட்ட பன்றியின் தலை ஒன்று வீசப்பட்டது சர்ச்சையானது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









