மெக்ஸிகோவில் சிறைக் கைதிகளிடையே கடும் மோதல்: 28 பேர் பலி

மெக்ஸிகோ நாட்டின் குய்ரெர்ரோ மாநிலம், அகாபுல்கோ நகரில் உள்ள சிறையில் இரு தரப்பு கைதிகளுக்கிடையே ஏற்பட்ட கடும்
மெக்ஸிகோவில் சிறைக் கைதிகளிடையே கடும் மோதல்: 28 பேர் பலி
Published on
Updated on
1 min read

மெக்ஸிகோ சிட்டி: மெக்ஸிகோ நாட்டின் குய்ரெர்ரோ மாநிலம், அகாபுல்கோ நகரில் உள்ள சிறையில் இரு தரப்பு கைதிகளுக்கிடையே ஏற்பட்ட கடும் மோதலில் இதுவரை 28 கைதிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சர்வதேச அளவில் போதை மருந்து விற்பனை செய்யும் கும்பல்களுக்கு சொர்க்கமாக திகழும் மெக்சிகோ நாட்டின் சிஹுவாவா மாநிலதில் அதிகளவிலான போதை மருந்து கடத்தல் கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. ஓபிலியம் எனப்படும் போதைப்பொருள் இங்கு அதிகமான அளவில் விற்பனை செய்யப்படுகிறது. மெக்சிகோ நாட்டிலேயே சட்டம் - ஒழுங்கு இந்த மாநிலத்தில் மிக மோசமான நிலையில் உள்ளது.

தெற்கு மெக்சிக்கோ மாநிலமான குய்ரெர்ரோ லாஸ் வராஸ் பகுதியில் உள்ள க்ராஸ்ஸில் சிறைச்சாலையில் 1624 கைதிகளை அடைத்து வைக்கும் வசதி கொண்டது. அதில், சுமார் 2000 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால், இங்கு சில அடிப்படை பிரச்சனைகள் கூட பெரிதாக வெடிக்கும். சிறை அதிகாரிகளும் இதை கண்டுகொள்வதில்லை. இந்நிலையில், 4 மணியளவில் சிறைக் கைதிகள் இரு தரப்பினருக்கு இடையே மோதல் வெடித்தது.

கையில் கிடைத்த பொருட்களை கொண்டு கைதிகள் எதிர்த் தரப்பினர் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தினர். இந்த மோதலில் சிக்கி 28 கைதிகள் உயிரிழந்தனர். 3 பேர் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கைதிகள் மோதலின் போது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. போதை மருந்து கடத்தல் கும்பல்களால் ஏற்படும் குற்றங்களை குறைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க உள்துறை செயலர் ஜான் கெல்லி மெக்சிகோ சிட்டி நகருக்கு வந்து, அந்நாட்டு அதிபர் பெனா நிட்டோவைச் சந்தித்துள்ள நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

நேற்று, முன்தினம் சினாலா மாநிலத்தில் இரு கும்பல்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் சிக்கி 26 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வன்முறை சம்பவங்களுக்கு பிறகு ஏராளமான பாதுகாப்பு போலீஸார் சிறைச்சாலையில் குவிக்கப்பட்டுள்ளனர்.  இந்த வன்முறை சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும், சிறை நடவடிக்கைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் ஆளுநர் ஹெக்டர் அஸ்டுடிலோ புளோரிஸ் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com