ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

லண்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ

மேற்கு லண்டனில் உள்ள 24 அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் ஒன்றில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், கட்டடம் முழுவதும் தீ

News image
Updated On :14 ஜூன் 2017, 3:49 am

DIN

லண்டன்: மேற்கு லண்டனில் உள்ள 24 அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் ஒன்றில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், கட்டடம் முழுவதும் தீ பற்றி எரியும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

மேற்கு லண்டன் லதிமேர் சாலையில் உள்ள 24 மாடி அடுக்குமாடி கிரீன் பீல் டவர் கட்டடத்தில் இன்று அதிகாலை காலை (உள்ளூர் நேரப்படி) 1.16 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 2வது தளத்தில் இருந்து 25வது தளம் வரை தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. 100-க்கும் மேலான குடும்பங்கள் வசித்துவரும் இந்த கட்டடம் 1947 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான கட்டடம்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு 40 தீயணைப்பு வாகனங்களுடன் வந்த 200 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

கட்டடம் முழுவதும் தீ கொழுந்துவிட்டு எரிந்து வருவதால் 100க்கும் மேலான வீடுகளில் வசித்து வந்தவர்களின் நிலை என்னவென்று தெரியாததால் அச்சம் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.