சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தென் கொரியாவின் புதிய அதிபராகிறார் மூன் ஜே-இன்

தென் கொரியாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில் மூன் ஜே-இன் (64) பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று வாக்குக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

News image
Updated On :9 மே 2017, 7:07 pm

DIN

தென் கொரியாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில் மூன் ஜே-இன் (64) பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று வாக்குக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
அதிபர் தேர்தலில் 13 பேர் போட்டியிட்டனர். தென் கொரிய ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட மூன் ஜே-இன், 41 சதவீதம் முதல் 42 சதவீத வாக்குகள் வரை பெற்று அதிபராவார் என்று வாக்குக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட 12 வேட்பாளர்களில், ஹோங் ஜூன்-பியோ, ஆன் சியோல்-சூ ஆகிய இருவரும் முறையே சுமார் 23, 21 சதவீத வாக்குகளைப் பெறுவர் என்று தெரிகிறது.
வட கொரியாவுடன் நட்புறவு கொள்ள வேண்டும் என்ற கொள்கை உடையவர் மூன் ஜே-இன். அவரது மகத்தான வெற்றி அந்த இரு நாடுகளிடையேயான உறவுகளில் பெருத்த மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
தென் கொரிய அதிபராகப் பதவி வகித்த பார்க் கியூன்-ஹை ஊழல் வழக்கில் சிக்கி பதவி நீக்கம் செய்யப்பட்டார். தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது பதவி நீக்கத்தைத் தொடர்ந்து புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
முழு வாக்கு எண்ணிக்கை விவரங்கள் புதன்கிழமை வெளியாகும். முடிவுகள் அதிகாரபூர்வாக அறிவிக்கப்பட்டவுடன் புதிய அதிபர் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.