வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜிநாமா

பாலியல் தாக்குதல் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, பிரிட்டனின் பாதுகாப்புத் துறை அமைச்சர் மைக்கேல் ஃபாலன் தனது பதவியை வியாழக்கிழமை ராஜிநாமா செய்தார்

News image
பிரிட்டன் பிரதமர் தெரசா மேயுடன் பாதுகாப்புத் துறைக்கான புதிய அமைச்சர் கேவின் வில்லியம்சன்.
Updated On :2 நவம்பர் 2017, 7:40 pm

DIN

பாலியல் தாக்குதல் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, பிரிட்டனின் பாதுகாப்புத் துறை அமைச்சர் மைக்கேல் ஃபாலன் தனது பதவியை வியாழக்கிழமை ராஜிநாமா செய்தார்.
பிரதமர் தெரசா மேக்கு எழுதிய ராஜிநாமா கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருப்பது: 
அண்மைக்காலமாக சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பாகப் பல குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருகின்றன. எனது முந்தைய கால நடவடிக்கைகள் குறித்தும் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டிருந்தன. அவற்றில் பலவும் பொய்க் குற்றச்சாட்டுகள். ஆனால் கடந்த காலத்தில் சில சந்தர்ப்பங்களில் எனது நடத்தையானது மிக உயரிய ஒழுக்க நிலையிலிருந்து வீழ்ச்சி அடைந்தது என்பதை ஒப்புக் கொள்கிறேன். 
நமது பாதுகாப்புப் படையின் பிரதிநிதியாக நான் அதன் கெளரவத்தைப் பாதுகாக்க வேண்டிய நிலையில், அதன் கெளரவத்துக்கு இழுக்கு நேரும் விதத்தில் எனது கடந்த கால செயல்கள் அமைந்தன. இதைத் தொடர்ந்து நான் எனது அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகுகிறேன் என்று பிரதமருக்கு எழுதிய ராஜிநாமா கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
அவரது ராஜிநாமாவை ஏற்றதாகப் பிரதமர் தெரசா மே அறிவித்தார். பாதுகாப்புத் துறைக்குப் புதிய அமைச்சராக கேவின் வில்லியம்சன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவர் ஆளும் கட்சியின் தலைமை கொறடாவாக இருந்து வருகிறார். சில ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அந்தரங்க நடவடிக்கைகள் குறித்து ஒளிவுமறைவாகப் பேசப்பட்டு வந்தாலும், அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் எவரும் இதுவரை நேரடியாகப் புகார் தெரிவிக்கவில்லை.
மைக்கேல் ஃபாலன் விவகாரத்தில், 15 ஆண்டுகளுக்கு முன்னால், செய்தியாளரான ஜூலியா ஹார்ட்லி புரூவர் அருகில் அமர்ந்திருந்தபோது அவரது அனுமதியின்றித் தொட்டார் என்று கூறப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஜூலியா ஹார்ட்லி புரூவர் அந்தக் காலகட்டத்தில் புகார் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் இந்த சம்பவத்தை அறிந்தவர்கள் மூலமாக அது கடந்த வாரம் கசிந்தது. 
நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்றும், நெறி தவறி நடந்து கொள்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் மே கூறி வந்த நிலையில், மூத்த அமைச்சரான மைக்கேல் ஃபாலன் தனது ராஜிநாமாவை வியாழக்கிழமை அறிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.