டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

உலகப் புகழ் பெற்ற டைட்டானிக் கப்பலில் பயணம் செய்தவரின் இறுதிக் கடிதம்: எவ்வளவு ரூபாய்க்கு ஏலம் விடத் திட்டம் தெரியுமா? 

தனது முதல் பயணத்திலேயே கடலில் மூழ்கி விபத்துக்குளான உலகப் புகழ் பெற்ற டைட்டானிக் கப்பலில், பயணம் செய்த பயணி ஒருவர் எழுதிய இறுதிக் கடிதத்தினை 8 கோடி ரூபாய்க்கு ஏலம் விட ஏல நிறுவனம் முடிவு செய்துள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 5:56 pm

DIN

லண்டன்: தனது முதல் பயணத்திலேயே கடலில் மூழ்கி விபத்துக்குளான உலகப் புகழ் பெற்ற டைட்டானிக் கப்பலில், பயணம் செய்த பயணி ஒருவர் எழுதிய இறுதிக் கடிதத்தினை 8 கோடி ரூபாய்க்கு ஏலம் விட ஏல நிறுவனம் முடிவு செய்துள்ளது.

1912-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட டைட்டானிக், அப்பொழுதைய சமயத்தில் உலகின் மிகப் பிரமாண்டமான சொகுசுக் கப்பலாகும். மிக பிரமாண்டமான பயணிகள் சொகுசு கப்பலான இது தனது கன்னி பயணமாக இங்கிலாந்தின் சவுத்தாம்டனில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் துறைமுகத்துக்கு புறப்பட்டு சென்றது. பயணத்தின் நடுவில் அட்லாண்டிக் கடலில் பனிப்பாறை ஒன்றின் மீது மோதி விபத்துக்குளாகி இரண்டாக உடைந்து, கடலில் மூழ்கியது.

இந்த கோர விபத்தில் 1500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அப்போது ஜல சமாதியாகி இறந்த பயணிகளில் அமெரிக்காவின் ஹோல்வர்சன் என்பவரும் ஒருவர். அப்பொழுது இவர் தனது தாய்க்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். இந்த கடிதத்தில் கப்பலில் பயணம் செய்த பல்வேறு சக பயணிகள் குறித்தெல்லாம்  ஹோல்வர்சன் எழுதி இருக்கிறார். அக்கடிதமானது விபத்தில் உயிர் தப்பிய ஒருவரால் எடுத்து வைக்கப்பட்டிருந்தது.

பலரிடம் கைமாறிய நிலையில்  தற்பொழுது அக்கடிதம்  நிலையில் இங்கிலாந்தின் வில்ட்சயர் நகரில் ஏலத்துக்கு வந்துள்ளது. இக்கடிதத்தை 80 ஆயிரம் பவுண்டுக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.8 கோடி) ஏலம் விட ஏல நிறுவனத்தினர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.