மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் பிரிட்டன் அரசியின் கணவர் பிலிப்

பிரிட்டன் அரசி எலிசபெத்தின் கணவரான இளவரசர் பிலிப் (96) மருத்துவமனையிலிருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

News image

சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பும் பிரிட்டன் அரசியின் கணவர் இளவரசர் பிலிப்.

Updated On :22 ஜூன் 2017, 6:25 pm

பிரிட்டன் அரசி எலிசபெத்தின் கணவரான இளவரசர் பிலிப் (96) மருத்துவமனையிலிருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இதுகுறித்து பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: இளவரசர் பிலிப் நோய்த் தொற்று காரணமாக லண்டனிலுள்ள மன்னர் ஏழாம் எட்வர்டு மருத்துவமனையில் அவசர சிகிக்சைக்காக கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டார்.
இரண்டு நாள் சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையிலிருந்து வியாழக்கிழமை வீடு திரும்பினார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சிறுநீர்ப்பையில் ஏற்பட்ட தொற்றால் பாதிக்கப்பட்ட இளவரசர் பிலிப் கடந்த 2012-முதல் அதற்காக இரண்டு முறை சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளார். மேலும், 2011-ஆம் ஆண்டு இருதய ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.