தீவைப்பு வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 6 மாத இடைக்கால ஜாமீன் வழங்கி திங்கள்கிழமை உத்தரவிட்டது.
பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசுக்கு எதிராக, கலீதா ஜியாவின் வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) கூட்டணி கடந்த 2015-ஆம் ஆண்டு காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டது.
அப்போது நடத்தப்பட்ட வன்முறை, பேருந்து தீவைப்புச் சம்பவங்களில் 8 பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவங்கள் தொடர்பாக, கலீதா மீது நடைபெற்ற வழக்கில் அவருக்கு 6 மாத ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஏகேஎம் அஸாதுஸமான் மற்றும் எம்.எஸ். முஜிபூர் ரஹ்மான் ஆகியோர் உத்தரவிட்டனர்.
ஏற்கெனவே, அறக்கட்டளை ஊழல் வழக்கில் கலிதா ஜியாவுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









